search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passenger arrested"

    • அமிர்தசரஸ் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
    • விமானம் அமிர்தசரஸ் வந்து இறங்கியதும் ராஜிந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

    அமிர்தசரஸ்:

    துபாயில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் ஜலந்தரை சேர்ந்த ராஜிந்தர் சிங் என்ற பயணி இருந்தார்.

    குடிபோதையில் இருந்த அவர் விமான பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து விமான பணிப்பெண் அவர் மீது புகார் அளித்தார்.

    இதுகுறித்து அமிர்தசரஸ் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமானம் அமிர்தசரஸ் வந்து இறங்கியதும் ராஜிந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

    • பெண் ஊழியரிடம் பயணி ரகளையில் ஈடுபட்ட காட்சிகளை விமானத்தில் பயணம் செய்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
    • தற்போது வீடியோ வைரலாகி வருகிறது. சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் இருந்து ஐதராபாத்திற்கு நேற்று ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று புறப்பட தயராக இருந்தது.

    விமானத்திற்கு வந்த பயணிகளை பெண் ஊழியர்கள் அவரவர் இருக்கையில் அமரவைத்தபடி இருந்தனர். அப்போது பயணி ஒருவர், பெண் ஊழியர் ஒருவரிடம் திடீரென தகராறில் ஈடுபட்டார்.

    அவருடன் வந்த இன்னொரு பயணியும் பெண் ஊழியரிடம் வாக்குவாதம் செய்தார். இருவரையும் சக பயணிகள் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் இருவரும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டபடி இருந்தனர்.

    இச்சம்பவம் குறித்து பெண் ஊழியர் விமான பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் உடனே விமானத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்ட பயணிகள் இருவரையும் விமானத்தில் இருந்து இறக்கினர். பின்னர் அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

    தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி டெல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட பயணி அப்சர் ஆலம் என்பவரை மட்டும் கைது செய்தனர்.

    இதற்கிடையே பெண் ஊழியரிடம் பயணி ரகளையில் ஈடுபட்ட காட்சிகளை விமானத்தில் பயணம் செய்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    அது தற்போது வைரலாகி வருகிறது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய பயணியை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    ரெயிலில் திருவனந்தபுரம், பாப்பனகோடு பகுதியை சேர்ந்த ராமசாமி(வயது36) என்பவர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

    இந்த ரெயிலின் டிக்கெட் பரிசோதகராக லார்டுவின் ஆனந்த் என்பவர் இருந்தார். ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது லார்டுவின் ஆனந்த் முன்பதிவு பெட்டியில் உள்ள ஒவ்வொருவரிடமும் பயண டிக்கெட்டை பரிசோதித்து வந்தார். ராமசாமி டிக்கெட்டையும் பரி சோதித்து கொண்டிருந்தார்.

    அப்போது லார்டுவின் ஆனந்துக்கும், ராமசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ராமசாமி டிக்கெட் பரிசோதகரை தாக்கினார்.

    இதையடுத்து ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. டிக்கெட் பரிசோதகர் ஈரோடு ரெயில்வே போலீசில் இது குறித்து புகார் செய்தார்.

    அதன் பேரில் வழக்குபதிவு செய்த ரெயில்வே போலீசார் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய ராமசாமியை கைது செய்தனர்.

    ×