search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே காதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை
    X

    பெருந்துறை அருகே காதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை

    காதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் புது மாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கோவில் பாளையம் சோழ நகரை சேர்ந்தவர் குமார்ராஜா (வயது 33).

    இவர் பெருந்துறை சிப் காட்டில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பணி புரிந்த ஷோபனா (21). இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

    பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 3 மாதத்துக்கு முன் இவர்களின் திருமணம் நடந்தது.

    குமார்ராஜாவுக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை காதல் மனைவி ஷோபனா கண்டித்தார். இது தொடர்பாக இரு வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதில் ஷோபனா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு போய் விட்டார். இதனால் குமார் ராஜா மிக வேதனையில் இருந்தார் இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அவரது அம்மா வெளியே போய் விட்டார். இதனால் அவர் காதல் மனைவி பிரிந்த ஏக்கத்தில் வீட்டில் உள்ள மின் விசிறி கம்பியில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்த அவரது தாயார் மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×