search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டில் நடப்பதை சினிமாவில் சொல்வது தவறு இல்லை- வைகோ
    X

    நாட்டில் நடப்பதை சினிமாவில் சொல்வது தவறு இல்லை- வைகோ

    நாட்டில் நடப்பதை சினிமாவில் கூறுவதில் எந்த தவறும் இல்லை என்றும் இதற்காக அந்த படத்துக்கு நெருக்கடி கொடுப்பது சரியில்லை என்றும் வைகோ கூறினார். #MDMK #Vaiko #Sarkar #Vijay
    ஈரோடு:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    1950ம் ஆண்டில் இருந்தே பராசக்தி, ஓர் இரவு ஆகிய படங்களில் சீர்த்திருத்த கருத்துக்கள் சொல்லப்பட்டு தான் வருகிறது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. தனிப்பட்ட ஒருவரைதான் விமர்சிக்க கூடாது.

    விஜய் நடித்த சர்க்கார் படத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

    இதற்காக அந்த படத்துக்கு ஆளுங்கட்சி தரப்பில் எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    நாட்டில் நடப்பதை சினிமாவில் கூறுவதில் எந்த தவறும் இல்லை. இதற்காக அந்த படத்துக்கு நெருக்கடி கொடுப்பதும் என்னைப் பொறுத்தவரை சரியில்லை.


    விஜய் பண்பானவர். அனைவரையும் மதிக்கக்கூடியவர் அவரிடம் எனக்கு நல்ல நட்பு உள்ளது. அவர் தனிப்பட்ட ஒருவரை விமர்சித்து இருக்க மாட்டார்.

    தி.மு.க.வுடன் எங்களுக்கு கொள்கை ரீதியில் எப்போதும் கூட்டணி உண்டு. இதை ஈரோட்டில் நடந்த மாநாட்டில் அறிவித்துள்ளோம். தி.மு.க.வுடன் வரும் தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம்.

    தீபாவளி பட்டாசு வெடித்தவர்களை மிரட்டும் வகையில் வழக்கு போடப்பட்டுள்ளது கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தவர்களை எச்சரித்து விட்டு இருக்கலாம் அதற்காக வழக்கு போடுவது நல்லதல்ல.

    இவ்வாறு வைகோ கூறினார். #MDMK #Vaiko #Sarkar #Vijay
    Next Story
    ×