என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கட்டடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நீர் ஓடையை தூர்வாரும் பணி மேற்கொள்ள இருப்பதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    கோவை:

    கோவை சிவானந்தா காலனி அருகே ஹட்கோ காலனியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு பின்புறம் சங்கனூர் ஒடை அருகே 70-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அமைந்துள்ளது.

    இந்த நிலையில் மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் சங்கனூர் ஓடையை தூர்வாரி கரைப்பகுதியை பலப்படுத்தி வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.

    அதன்படி கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போலீஸ் சோதனை புறக்காவல் நிலையம் அருகே தொடங்கி 2.3 கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதற்காக சங்கனூர் ஓடையின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓடையின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

    டாடாபாத் ஹட்கோ காலனி அண்ணாநகரில் சங்கனூர் ஓடைதூர்வாரும் பணி நடந்தது. சங்கனூர் ஓடையின் கரையோரம் சுரேஷ என்பவருக்கு சொந்தமான 2 மாடி வீடு உள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டின் பின்பகு தியை 10 அடி தூரம் வரை இடித்து அகற்றி தர வேண்டும் என மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அந்த வீட்டின் பின்புறம் 10 அடி வரை இடித்து அகற்றப்ப ட்டது. பின்புற வீட்டை அகற்றியதால் சுரேஷ் வேறு வீட்டிற்கு சென்று விட்டார். இருப்பினும் பொருட்கள் அந்த வீட்டிலேயே இருந்தது. அவ்வப்போது அந்த வீட்டி ற்கு வந்து சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு 2 மாடி வீட்டில் திடீரென அதிர்வு ஏற்பட்டது. மேலும் வீடு சரிந்து கீழே விழுவது போல அசைந்து கொண்டு இருந்தது.

    இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடை ந்தனர். இந்த வீட்டில் ஏற்ப ட்ட அதிர்வு அருகே உள்ள லட்சுமணன், ரேணுகா தம்பதியரின் வீட்டிலும் காணப்பட்டது.

    அவர்கள் அப்போது வீட்டிற்குள் அமர்ந்து சாப்பி ட்டு கொண்டிருந்தனர். வீடு அதிர்வது போன்று உணர்ந்ததால் உடனடியாக வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.

    இந்த நிலையில் சிறிது நேரத்தில் சுரேஷின் 2 மாடி வீடு முழுவதுமாக சீட்டுக்க ட்டு போல சரிந்து கீழே விழுந்தது. அருகே இருந்த 2 வீடுகளும் இடிந்து விழு ந்தன. அதிர்ஷ்டவசமாக 2 மாடி வீட்டிற்குள் யாரும் இல்லாததாலும், அருகே இருந்த வீட்டில் இருந்த வர்கள் உடனடியாக வெளி யேறியதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்ப ட்டது. வீட்டிற்குள் இருந்த டி.வி, பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தது.

    மேலும் வீடு இடிவதற்கு கால் மணி நேரத்திற்கு முன்பு வரை, வீடு இடிந்து விழுந்த இடத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணியில் இருந்த னர். பணி முடிந்து அவர்கள் சென்றதால் பெரும் உயிர்சே தம் தவிர்க்கப்பட்டது.

    அடுத்தடுத்து வீடுகள் இடிந்து விழுந்த சம்பவம் கோவையில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை இழந்து தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    தகவல் அறிந்தது மாநக ராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இடிந்து விழுந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை இங்கு பணிகளை மேற்கொள்ள கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்டு நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, நாராயணசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' என்ற பிரபல இன்ஸ்டா பக்கத்தில் வெளியான வீடியோ இணையத்தில் வைரலானது.
    • பழகிருஷ்னன் வீட்டை சோதனையிட்ட வனத்துறையினர் மானின் கொம்புகளை பறிமுதல் செய்தனர்.

    கோவையில் இன்ஸ்டா பிரபலம் எடுத்த வீடியோவில் மான்கொம்பு வைத்திருந்ததாக கூறிய பாலகிருஷ்ணன் என்ற நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

    'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' என்ற பிரபல இன்ஸ்டா பக்கத்தில், தான் புலி நகம் கொண்ட செயின் அணிந்திருப்பதாக தொழிலதிபர் பாலகிருஷ்ணன் பேட்டி கொடுத்துள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பாலகிருஷ்ணன் வீட்டை வனத்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது வீட்டில் இருந்து புள்ளி மானின் கொம்புகள் மற்றும் பாலகிருஷ்ணன் கழுத்தில் அணிந்திருந்த புலி நகத்தை வனத்துறையினர் கைப்பற்றினர். இதனையடுத்து பாலகிருஷ்ணனை வனத்துறையினர் கைது செய்தனர்.

    • வீட்டு வாசல் முன்பு நின்ற காட்டு யானையை பார்த்து வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • யானை அரிசிப்பையை இழுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியது.

    கவுண்டம்பாளையம்:

    பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கூடலூர் நகராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களாக ஒற்றை ஆண் காட்டு யானை முகாமிட்டு அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    மேலும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி வேலுமணி என்பவர், காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அதே யானை தொடர்ந்து ஒவ்வொரு கிராமமாக புகுந்து விடியும்வரை பொதுமக்களை அலற விட்டு வருகிறது.

    தெக்குபாளையம் கென்னடி தென்றல் அவின்யூ பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். அவர்கள் நேற்றிரவு வீட்டில் கதவை திறந்து வைத்துவிட்டு சமையல் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை தெக்குபாளையம் தென்றல் அவின்யூ பகுதிக்கு வந்தது. பின்னர் அது வாலிபர்கள் தங்கிய வீட்டின் முன்பாக வந்து நின்றது.

    இதற்கிடையே வீட்டு வாசல் முன்பு நின்ற காட்டு யானையை பார்த்து வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் சமையல் கியாஸ் அடுப்பை அவசரம்-அவசரமாக அணைத்துவிட்டு சுவர் ஓரமாக பதுங்கி கொண்டனர்.

    தொடர்ந்து அந்த யானை தலையின் முன்பகுதியை மட்டும் வீட்டுக்குள் நுழைத்து, அங்கிருந்த டப்பாவை தும்பிக்கையால் இழுத்து கீழே கொட்டிவிட்டு அரிசியை மட்டும் தின்றது. மேலும் வீட்டுக்குள் இருந்த சமையல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இழுத்து வெளியே வீசி எறிந்தது. அதன்பிறகு அந்த யானை வெளியேறி சென்றது.

    ஆனால் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் அதே வீட்டுக்கு திரும்பி வந்த காட்டு யானை, ஒரு காலை மட்டும் வீட்டுக்குள் எடுத்து வைத்து, பாதி உடம்பை உள்ளே புகுத்திக்கொண்டு தும்பிக்கையால் மீண்டும் பொருட்களை தேடியது.

    அப்போது வீட்டுக்குள் பதுங்கி இருந்த தொழிலாளர்கள், சமைப்பதற்காக வைத்திருந்த அரிசிப்பையை தூக்கி போட்டனர். தொடர்ந்து அந்த யானை அரிசிப்பையை இழுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பட்டாசு வெடித்து காட்டு யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர்.

    • இணையத்தில் ட்ரெண்டாகும் மீம்களை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் போலீசார் பகிர்ந்து வருகின்றனர்.
    • கிரீடம் படத்தில் வரும் ராஜ்கிரணை வைத்து நெட்டிசன்கள் நிறைய மீம்களை பகிர்ந்து வந்தனர்.

    கிரீடம் படத்தில் வரும் 'கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே' என்ற பாடலை வைத்து நெட்டிசன்கள் அண்மையில் நிறைய மீம்களை பகிர்ந்து வந்தனர்.

    அந்த பாடலில் தன மகனை நினைத்து அப்பா ராஜ்கிரண் பெருமைப்படுவார். அதனை மீமாக மாற்றி நெட்டிசன்கள் பகிர்ந்து வந்தனர்.

    அவ்வகையில் இந்த மீமை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையும் கோவை போலீசார் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'அனைத்து கோவை மக்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி, ஹெல்மெட் அணிகின்றனர்.' அதனை நினைத்து கோவை போக்குவரத்து போலீசார் பெருமைப்படுவதாக கிண்டலாக தெரிவித்துள்ளனர்.

    சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் மீம்களை காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பலூன்களில் பயணிக்க சுற்றுலா பயணிகள் பலரும் விரும்பினர்.
    • பட்டஞ்சேரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வட்டச்சிறா பகுதியில் வயல் வெளியில் தரையிறங்கியது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது.

    இந்த திருவிழாவில் அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ, பிரான்ஸ், தாய்லாந்து, பிரேசில், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 8 ராட்சத பலூன்கள் கொண்டு வரப்பட்டன. இதில் யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவிலான பலூன்கள் இடம் பெற்று இருந்தது.

    இந்த பலூன்கள் வானில் பறக்கவிடும் நிகழ்ச்சி கடந்த 14-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது. பலூன்களில் பயணிக்க சுற்றுலா பயணிகள் பலரும் விரும்பினர். குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி சுற்றுலா பயணிகள் வெவ்வேறு பலூன்களில் 10 கி.மீ தூரத்துக்கு 100 அடிக்கு மேல் பறந்தபடி பயணித்து உற்சாகம் அடைந்தனர்.

    ஆச்சிப்பட்டி மைதானத்தில் பறக்க தொடங்கும் பலூன்கள் அம்பராம்பாளையம் அருகே பொன்னாயூர் சுற்றியுள்ள கிராமங்களில் ஆங்காங்கே தரையிறங்கியது. யானை, புலி, கரடி வடிவிலான ராட்சத பலூன்கள் வானில் உயர, உயர பறந்து செல்வதை பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.

    3 நாட்கள் நடந்த இந்த ராட்சத பலூன் திருவிழாவை காண பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அதிகளவிலான மக்கள் ஆச்சிபட்டி மைதானத்தில் குவிந்தனர். அவர்கள் வானில் பறந்த பலூன்களை பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.


    நேற்றுமுன்தினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு ராட்சத பலூன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கன்னிமாரா கிராமத்திற்கு திசை மாறி சென்று விளைநிலத்தில் தரையிறங்கியது.

    இதில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு பலூன் பாலக்காடு மாவட்டம் பட்டஞ்சேரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வட்டச்சிறா பகுதியில் வயல் வெளியில் தரையிறங்கியது.

    திசை மாறிய காற்றின் வேகம் காரணமாக அந்த வெப்ப காற்றழுத்த பலூன் இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல் திசைமாறி சென்றது. அதில் பயணித்த பெண் மற்றும் அவரது மகள் பீதி அடைந்தனர்.

    அவர்கள் 2 பேர் மற்றும் பைலட் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை பலூன் திருவிழா நடத்தியவர்கள் மீட்டு காரில் அழைத்து வந்தனர். வயலில் விழுந்த பலூனும் மீட்கப்பட்டது. இப்படி பல்வேறு பரபரப்புடனும், பதட்டத்துடனும் நடைபெற்று வந்த 3 நாள் பலூன் திருவிழா நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

    • ஈஷாவில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள்.

    கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பு "பொங்கல் விழா" நேற்றும் இன்றும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் பெரும் உற்சாகத்தோடு நடைபெற்றது.

    ஈஷாவில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    இந்தாண்டு கொண்டாட்டங்கள் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வோடு துவங்கியது. இதில் ஈஷாவை சுற்றியிருக்கும் பழங்குடி மக்கள், தன்னார்வலர்கள், ஆசிரமவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் இணைந்து பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

    விவசாயத்தில் மிக முக்கிய பங்காற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈஷாவில் பராமரிக்கப்படும் நாட்டு மாடுகளுக்கு சிறப்பான முறையில் வழிபாடுகள் செய்யப்பட்டன.

    மேலும், அருகி வரும் நாட்டு மாடு இனங்களான காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட 23 வகையிலான நாட்டு மாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. ஈஷா கோசாலையில் 700-க்கும் அதிகமான பாரம்பரிய நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    இதனை தொடர்ந்து, மாலையில் தூத்துக்குடி சகா கலைக் குழுவினரின் ஒயிலாட்டம், பறையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட 7 வகையான தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இவ்விழா இரவு 7 மணியளவில் ஆதியோகி திவ்ய தரிசனத்துடன் நிறைவுப்பெற்றது.

    பொங்கல் விடுமுறை நாட்களை முன்னிட்டு நேற்றும் இன்றும் லட்சக்கணக்கான மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் உள்ள துணிமணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
    • கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலை, ரத்தினம் நகரை சேர்ந்தவர் கார்த்திக். பல் மருத்துவராக உள்ளார்.

    இவர் பொங்கலையொட்டி வெளியூரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது டாக்டர் வீட்டின் கதவு திறந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக கார்த்திக்கை செல்போனில் தொடர்பு கொண்டு கதவு திறந்து இருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து டாக்டர் கார்த்திக் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் உள்ள துணிமணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    மேலும் அதில் வைத்திருந்த 136 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் மாயமாகி இருந்தது. கார்த்திக் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கார்த்திக் உடனடியாக மகாலிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் டி.எஸ்.பி. சிருஷ்டிசிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். டாக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 8 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
    • யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

    பொள்ளாச்சி:

    சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழக சுற்றுலாத்துறை, தனியார் அமைப்புடன் இணைந்து பலூன் திருவிழாவை நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டு சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது. சென்னையில் கடந்த வாரம் பலூன் திருவிழா நடைபெற்றது.

    பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி மைதானத்தில் 10-வது ஆண்டாக நேற்று பலூன் திருவிழா தொடங்கியது.

    3 நாட்கள் நடக்கும் இந்த பலூன் திருவிழாவில், பிரான்ஸ், பிரேசில், வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதில் யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. பலூன்கள் பறந்ததை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    இந்த நிலையில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி மைதானத்தில் இருந்து 6-ம் எண் கொண்ட யானை வடிவிலான ராட்சத பலூன் வானில் பறக்கவிடப்பட்டது.

    இந்த பலூனில் வெளிநாட்டை சேர்ந்த ஆண், பெண் பைலட்டுகள் இருந்தனர். அவர்களுடன் 2 பெண் குழந்தைகளும் பலூனில் பயணம் செய்தனர்.

    ஆச்சிப்பட்டி மைதானத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் இந்த பலூனை தரையிறக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், காற்றின் வேகத்தால் பலூன் திசைமாறி வானில் சுற்றி கொண்டிருந்தது.

    பின்னர் திசை மாறிய பலூன் 30 கி.மீ தூரம் தாண்டி உள்ள கேரள மாநிலம் கன்னிமாரி முல்லந்தட்டு என்ற பகுதியில் உள்ள வயல்வெளியில் தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக பலூனில் இருந்தவர்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். வயலில் பலூன் இறங்கியதை அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு கூடி விட்டனர். இதற்கிடையே வயலில் பலூன் இறங்கியதை அறிந்ததும் விழா ஏற்பாட்டாளர்கள் விரைந்து சென்று, உள்ளூர் மக்கள் உதவியுடன், வயல் வெளியில் விழுந்த ராட்சத பலூனில் இருந்த ஆண், பெண் பைலட்டுகள், 2 பெண் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • அபுதாபிக்கு இயக்கப்படும் விமானத்தில் பெரிய அளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுவது இல்லை.
    • ஷார்ஜா செல்லும் விமானத்தில் பல வகையான பொருட்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு முறையும் 3 டன்கள் வரை சரக்குகள் கையாளப்படுவது வழக்கம். மேலும் காய்கறிகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் முன்பதிவு செய்யப்படும்.

    இந்த நிலையில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் கரும்புகளை கொண்டு செல்வதற்கான புக்கிங் பணிகள், கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்றன.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் விமான சேவை வழங்கப்படும் போதும் ஒவ்வொரு முறையும் ஒரு டன் வீதம் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகிறது.

    அபுதாபிக்கு இயக்கப்படும் விமானத்தில் பெரிய அளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுவது இல்லை. ஷார்ஜா செல்லும் விமானத்தில் பல வகையான பொருட்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

    அதிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10, 11-ந்தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் கோவை விமான நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 டன் கரும்புகள் புக்கிங் செய்யப்பட்டு, ஷார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    கோவை விமான நிலையத்தில் தினமும் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டமும் அதிகரித்து உள்ளது.

    அதிலும் குறிப்பாக ஜனவரி 9-ந்தேதி மட்டும் உள்நாட்டு பிரிவில் 9893 பேரும், வெளிநாட்டுப்பிரிவில் இருந்து 1279 பேரும் என மொத்தம் 11,172 பேர் பயணித்து உள்ளனர். மேலும் அன்றைய தினம் 33 விமானங்கள் இயக்கப்பட்டன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பொங்கல் சீசன் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • மதுரையில் இருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்படும் சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்லும்.

    கோவை:

    சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு சென்னை-மதுரை இடையே கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் பொங்கல் சீசன் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மதியம் 3 மணிக்கு புறப்படும் மதுரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06067) நாளை காலை 5 மணிக்கு மதுரை செல்லும்.

    மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து நாளை (12-ந்தேதி) இரவு 7 மணிக்கு புறப்படும் சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06068) மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்லும்.

    இந்த ரெயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • எவ்வித ஆதாரம் இன்றி பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்.
    • யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    தந்தை பெரியார் குறித்து அவதூறு பேசியதாக, சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிட கழகத்தினர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரியார் பேசியதாக, ஆதாரம் இல்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அதனை நாம் தமிழர் கட்சியின் அதிகாரப் பூர்வமான யூடியூபிலும் பதிவு செய்தனர்.

    சீமான் கூறுவது போன்று தந்தை பெரியார் எந்த ஒரு இடத்திலும் பேசியதில்லை. தனது அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு தந்தை பெரியாரின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் எவ்வித ஆதாரம் இன்றி பொய்யான செய்தியை சீமான் பேசி வருகிறார்.

    தந்தை பெரியார் குறித்து இளைஞர்கள் மத்தியில் பொய்யை பரப்பி, தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்யும் சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இந்த ஆதாரம் அற்ற பேச்சினை, அவர்களது யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் ஆறுச்சாமி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் குரு, ஆதித்தமிழர் பேரவை சார்பில் ரவிக்குமார், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழக சார்பில் நேரு தாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • இப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை? இதற்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.
    • 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரிய அடி கிடைக்கும்.

    கோவை:

    பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுக்க சொன்னால், கவர்னர் பிரிவினை வாதம் பேசுவதாக தி.மு.க.வினர் சொல்கிறார்கள். கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.

    ஆனால் அதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக அவருக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர்.

    ஆளுங்கட்சியான தி.மு.க. போராட்டம் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இப்போது இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இவர்களது ஆர்ப்பாட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லையா?

    கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை எல்லாம் அப்போது கைது செய்தீர்கள்.

    இப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை? இதற்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.

    அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தை திசை திருப்பவும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைக்கவே தி.மு.க. இந்த போராட்டத்தை நடத்துகிறது.

    முதலமைச்சர், கவர்னர் குறித்து வரம்பு மீறி டுவிட் செய்துள்ளார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுகுறித்து எதிர்கட்சிகள் கேட்டாலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ நாங்கள் தான் ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். நீங்கள் எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என கேட்கின்றனர்.

    தமிழக அரசு தவறான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எல்லா குரல்வலையும் நசுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது எமர்ஜென்சியே நடந்து கொண்டிருக்கிறது.

    இவ்வளவு நாட்களாக காவியை பார்த்து பயந்த தி.மு.க. தற்போது கருப்பு நிறத்தை பார்த்தும் பயப்பட தொடங்கியது. உடை என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. தி.மு.க.வுக்கு எதை பார்த்தாலுமே பயமாக உள்ளது.

    தி.மு.க கூட்டணியில் தற்போது குழப்பம் வந்து வெடவெடுத்து போய் இருக்கிறது. அதை மறைக்கவே இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள். இதுவரை பொங்கல் பண்டிகைக்கு கொடுத்து வந்த ரூ.1000-த்தை இந்த ஆண்டு கொடுக்கவில்லை. தேர்தல் நெருங்கும் போது பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கி விடுவார்கள். இப்போது கொடுத்தால் தேர்தலுக்குள் சூரியனை மறந்து விடுவார்கள் என்பதால் இப்போது கொடுக்கவில்லை.

    2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரிய அடி கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×