கனவெல்லாம் பலிக்குதே.. கோவை காவல்துறையின் விழிப்புணர்வு பதிவு

இணையத்தில் ட்ரெண்டாகும் மீம்களை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் போலீசார் பகிர்ந்து வருகின்றனர்.கிரீடம் படத்தில் வரும் ராஜ்கிரணை வைத்து நெட்டிசன்கள் நிறைய மீம்களை பகிர்ந்து வந்தனர்.
கனவெல்லாம் பலிக்குதே.. கோவை காவல்துறையின் விழிப்புணர்வு பதிவு
Published on

கிரீடம் படத்தில் வரும் 'கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே' என்ற பாடலை வைத்து நெட்டிசன்கள் அண்மையில் நிறைய மீம்களை பகிர்ந்து வந்தனர்.

அந்த பாடலில் தன மகனை நினைத்து அப்பா ராஜ்கிரண் பெருமைப்படுவார். அதனை மீமாக மாற்றி நெட்டிசன்கள் பகிர்ந்து வந்தனர்.

அவ்வகையில் இந்த மீமை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையும் கோவை போலீசார் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'அனைத்து கோவை மக்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி, ஹெல்மெட் அணிகின்றனர்.' அதனை நினைத்து கோவை போக்குவரத்து போலீசார் பெருமைப்படுவதாக கிண்டலாக தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் மீம்களை காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com