என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ் புத்தாண்டு திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,"

    தமிழர்கள் வாழ்வில் நீங்காத இடம் பிடித்திருக்கும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும்.

    சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.

    சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான். அதிலும் குறிப்பாக சித்திரை முழுநிலவு நாம் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும்; நமது வெற்றியை மட்டுமே பறைசாற்றும். வழக்கம் போலவே இந்த சித்திரையும் நம் வாழ்வில் மகிழ்ச்சியை நிறைக்கும்.

    சங்கக் காலத்தைப் போலவே நிகழ்காலத்திலும் தமிழர்கள் வாழ்க்கை திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றால் நிறைக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக தமிழர்களின் தொழில்கள் சிறக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்; அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும் என வாழ்த்துகிறேன்" என்றார்.

    பாமக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், " இந்திர விழாவை நமக்குக் கொண்டு வரும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

    மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. அவ்வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும்.

    வெயிலைக் கொடுக்கும் சித்திரை தான் இனி வரும் ஆண்டுகளில் நமக்கு வெற்றிகளையும் வழங்கப் போகிறது. சித்திரை வெற்றிகளையே வழங்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையும் கூட. தமிழர்களின் வாழ்வில் வரப்போகும் பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது.

    சித்திரை மாதத்தின் தொடக்கமான இந்த நாள் தமிழர்களின் வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் நிறைவதன் தொடக்கமாக அமைய வேண்டும். தமிழர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் நன்மைகள் கிடைக்க சித்திரைத் திருநாள் வகை செய்ய வேண்டும் என்று கூறி சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து கூறுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    பாஜக நிர்வாகி சரத்குமார் தனது வாழ்த்து செய்தியில், "தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் 13வது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நயினார் நாககந்திரன் அவர்களின் பணி சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் லட்சிய பயணம் வெற்றி பெற சூளுரை ஏற்போம்.

    தமிழ் ஆண்டுகளில் உலக நிறைவு என்னும் பொருள் கொண்ட விசுவாசுவ புத்தாண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த இனிய தமிழ்புத்தாண்டானது கடந்த கால சோதனைகளையும், வேதனைகளையும் அகற்றி மக்கள் அனைவர் வாழ்விலும் உயர்வையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், அன்பு நிறைந்த வளத்தையும், ஆரோக்கியத்தையும் அருள்வதாக அமையட்டும்.

    இனிய சித்திரை புத்தாண்டில் மக்கள் வாழ்வில் வளம் பெருக வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும் பாஜக சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், " சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இயத இனிய நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறையத தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் மாற்றத்திற்கான புதிய சியதனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகள் உருவாகி, தமிழ்நாட்டை அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் அழைத்துச் செல்ல இயத இனிய திருநாளில் உறுதியேற்போம்.

    இயத இனிய தமிழ்ப் புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும், இன்பமும், இனிமையும் இல்லயதோறும் பொங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கிலும் வாழும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை

    எனது மனமார்யத தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    • அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தவெகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

    திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தவெகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    • உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான நமது கூட்டுறுதியை இது மேலும் வலுப்படுத்தட்டும்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் ராஜ் பவன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் புத்தாண்டின் விசேஷமிக்க தருணத்தில் அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நாள் நமது பெருமைமிக்க பண்டைய மற்றும் வளமான தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், துடிப்பான நிகழ்காலம் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும்.

    புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும்.

    #அமிர்தகாலத்தில் #வளர்ச்சியடைந்தபாரதம்2047 -க்கான வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான நமது கூட்டுறுதியை இது மேலும் வலுப்படுத்தட்டும்".

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையங்களில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடவடிக்கை.

    பிரபல தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தனியார் நிறுவன இயக்குனர்கள் மீது ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையங்களில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தனியார் நிறுவனம் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • அ.தி.மு.க. தலைவர்கள் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு சுறுசுறுப்புடன் தயாராகி வருகிறார்கள்.
    • எப்போது பிரசாரத்தை தொடங்குவார்? என்கிற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறிய அ.தி.மு.க. மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

    இந்த கூட்டணிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.

    இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்த கையோடு அ.தி.மு.க. தலைவர்கள் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு சுறுசுறுப்புடன் தயாராகி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தீவிர சுற்றுப்பயணத்துக்கு தயாராகி வருகிறார். மாவட்டம் வாரியாக அவர் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்கான முன் ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொண்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி அந்த கட்சியை விமர்சித்து பேசி உள்ளார். அதே போன்று மாநில தலைவராக இருந்த அண்ணாமலையும் அ.தி.மு.க. தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

    இதனால் 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே மனக்கசப்பும் ஏற்பட்டிருந்தது. அதனை சரி செய்யும் வகையில் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே இணக்கமான சூழல் ஏற்பட வழி பிறக்கும் என்பதே 2 கட்சி தலைவர்களின் எண்ணமாக உள்ளது. அது போன்ற சூழல் ஏற்பட்டால் மட்டுமே தலைவர்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது ஒன்றுபட்டு செயல்பட முடியும் என்பதால் அதற்கான அனைத்து எற்பாடுகளையும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை பங்குனி உத்திர நாளில் முடிவு செய்து மத்திய மந்திரி அமித்ஷா அறிவிப்பு வெளியிட்டதை சுட்டிக்காட்டும் அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின சுற்றுப் பயணத்துக்கும் நல்ல நாள் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    கூட்டணி பற்றிய கவலை தீர்ந்துள்ளதால் இனி தமிழக அரசுக்கு எதிரான விஷயங்களை முன்னிலைப்படுத்தி தீவிர பிரசாரம் செய்வதற்கு அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.

    இப்படி தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்று கூட்டணி பலத்துடன் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வெற்றிக் கனியை பறிக்கும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடர்பாக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவர் கூறும்போது, கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருவதாகவும், அவர் எப்போது பிரசாரத்தை தொடங்குவார்? என்கிற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

    தற்போது கோடை காலம் என்பதால் அது முடிந்த பின்பு சுற்றுப்பயணத்தை தொடங்கலாமா? இல்லை வெயிலை பொருட்படுத்தாமல் இப்போதே பிரசார பயணத்தை தொடங்கலாமா? என்பது பற்றியெல்லாம் ஆலோசித்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

    இதே போன்று மற்ற கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார்கள். இதனால் சட்டசபை தேர்தல் களம் ஓராண்டுக்கு முன்பே சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    • "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறந்து வைக்கபட்டது.
    • ரூ .1 கோடி மதிப்பீட்டில் “அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறந்து வைப்பு.

    சென்னை மெரினாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறந்து வைக்கபட்டது.

    மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

    இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சமூகத்தின் விளிம்பில் இருப்போருக்கும் சமவாய்ப்பளித்து, மையநீரோட்டத்தில் இணைத்துக் கரம் கோத்துப் பயணிப்பதுதான் ஒரு முற்போக்கான முதிர்ந்த சமூகத்தின் அடையாளம்!

    அவ்வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மெரினாவில் நான் திறந்து வைத்த #அனைத்தும்_சாத்தியம் (Museum of Possibilities) அருங்காட்சியகம் பெயருக்கேற்ற வகையில், மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் மையமாக வெற்றியடைந்துள்ளதைக் கண்டு மகிழ்கிறேன்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டது அந்த கட்சி சார்ந்த விஷயமாகும்.
    • 40 முனை இருந்தாலும் என் முனைதான் கூர் முனையாகும்.

    சென்னை:

    வக்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இஸ்லாமியர்கள் தங்களது சொத்துக்களை கொடையாக கொடுத்ததே வக்பு சொத்துக்கள். அது ஏழைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்கிற கோட்பாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும். அதனை வாங்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. அது அல்லாவுக்கே சொந்தமாகும்.

    வக்பு வாரிய சொத்துக்களை அரசு அதிகாரிகள் நிர்வகிக்கும் முறையை கொண்டு வந்திருப்பது இந்து மக்களின் மனதை குளிர்விப்பதற்கே ஆகும்.

    இந்துக்களின் வாக்கை பெறுவதற்காகவே மத்திய அரசு இது போன்று செயல்பட்டுள்ளது. வக்பு சொத்தை நிர்வகிப்பதற்கு இந்து மதத்தினரை அமர்த்துவது பேராபத்தை ஏற்படுத்தும். இந்து அறநிலையத்துறையிடம் உள்ள சொத்துக்களை நிர்வகிக்கவும் முஸ்லிம், கிறிஸ்தவர்களை நியமிக்க வேண்டும். முஸ்லிம் மதத்தை குறி வைத்து மத்திய அரசு செயல்படுவது ஏற்புடையது அல்ல.

    இது இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கையாகும். வாக்குகளை மட்டுமே குறி வைத்து ஆட்சியாளர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதிகாரம் மிக வலிமையானது என்று அண்ணல் அம்பேத்கார் கூறியுள்ளார். அது திராவிடர்களின் கையில் இருப்பது மிகவும் கொடுமையானதாகும்.

    தமிழகத்தில் நிலமற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும். நீண்ட நாட்கள் இது போன்று ஏமாற்றி கொண்டிருக்க முடியாது.

    கால சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. அப்போது எங்களிடம் ஒருநாள் அதிகாரம் வரும் போது இதையெல்லாம் சரி செய்வோம். வாக்குகளை குறி வைத்தே இன்று கட்சிகள் செயல்படுகின்றன. மக்களை பற்றி கவலைப்படுவது இல்லை.

    தி.மு.க., அ.தி.மு.க. 2 கட்சிகளும் ஒன்றுதான். கொடி மட்டுமே கொஞ்சம் மாறுபட்டுள்ளது. 2 கட்சிகளுமே லஞ்சம், ஊழலில் சிக்கி திளைத்த கட்சிகள் ஆகும். இரு கட்சிகள் ஆட்சி செய்த போதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. 2 கட்சிகளும் கச்சத்தீவை மீட்போம் என்பார்கள். டாஸ்மாக்கை மூடுவோம் என்பார்கள். ஆனால் ஒன்றும் நடக்காது.

    அதனால்தான் காமராஜர் 2 கட்சிகளையும் பார்த்து ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்றார். அந்த மட்டையை பிய்த்து நார் நாராக பிரிப்பதற்குதான் நாங்கள் வந்துள்ளோம்.

    தமிழக பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டது அந்த கட்சி சார்ந்த விஷயமாகும். அதில் கருத்து கூறக்கூடாது. சட்டசபை தேர்தல் நிலைப்பாடு பற்றி கேட்டுள்ளீர்கள். 40 முனை இருந்தாலும் என் முனைதான் கூர் முனையாகும். பண பலத்தோடு அவர்கள் நிற்கிறார்கள். நான் மக்களோடு நிற்கிறேன்.

    பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. அடி பணிந்துள்ளதா? என்று கேட்கிறீர்கள்? எல்லா விஷயத்திலும் கருத்து சொல்வது கண்ணியமாகவும், நாகரிகமாகவும் இருக்காது. யாருடன் கூட்டணி? யாருடன் கூட்டணி என திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். டிரம்புடன் கூட்டணி வைக்கலாம் என்று நினைக்கிறேன். சைவம், வைணவத்தை குறிப்பிட்டு அமைச்சர் பேசி இருப்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    • தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்களில் அண்ணாமலையும் ஒருவர்.
    • கட்சித் தலைவர் நட்டா, அமித்ஷா மற்றும் முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

    அண்ணாமலைக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கப்படாதது கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்திருந்த மத்திய மந்திரி அமித்ஷா நிருபர்களிடம் கூறும் போது, அண்ணாமலையின் பணிகள் பாராட்டுக்குரியது. அவருக்கு கட்சி மேலிடம் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கும் என்றார்.

    நேற்று தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்களில் அண்ணாமலையும் ஒருவர்.

    இந்த நிலையில் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். பதவி மாற்றத்துக்கு பிறகு அண்ணாமலை திடீரென்று டெல்லி சென்று இருப்பது கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

    டெல்லியில் அவர் கட்சித் தலைவர் நட்டா, அமித்ஷா மற்றும் முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

    புதிய தேசிய தலைவர் தேர்தல் நாளை மறுநாள் டெல்லியில் நடக்கிறது. அப்போது அண்ணாமலைக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும்!
    • பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே!

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நம்மைப் பார்த்து "பொருந்தாக் கூட்டணி" என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்!

    ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்!

    ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் மு.க.ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது!

    இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது!

    முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது!

    இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும்!

    பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே!

    இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது! என்று கூறியுள்ளார். 




    • நான் உட்பட தமிழக பா.ஜ.க. சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.
    • அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று, உங்கள் அன்பு சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த சுமார் நான்கு மாதங்களாக, நான் உட்பட தமிழக பா.ஜ.க. சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.

    நேற்றைய தினம், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர், அன்பு அண்ணன் நயினார் நாகேந்திரனின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன்.

    என்னுடன் விரதம் மேற்கொண்டு வந்த தமிழக பா.ஜ.க சகோதர சகோதரிகள், வரும் நாட்களில், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கல்லையும் முள்ளையும் கடந்து பயணப்பட்டு, தங்கள் கடின உழைப்பை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, அண்ணன் நயினார் நாகேந்திரனின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று, உங்கள் அன்பு சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன்.

    வாழ்க தமிழ். வளர்க பாரதம்... என்று கூறியுள்ளார். 



    • பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
    • யாரும் தனித்தனியாக சென்று மாலை அணிவிக்க வேண்டாம்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நிர்வாகிகளுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நம் கட்சித் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் நமது கொள்கை தலைவர்களில் ஒருவரான இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான நாளை (14-ந்தேதி) அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் தங்கள் மாவட்டம் சார்பாக மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கண்டிப்பாக ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். யாரும் தனித்தனியாக சென்று மாலை அணிவிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
    • எனது இதயமார்ந்த ‘தமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நன்னாளில், அன்பிற்கினிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    எனதருமை தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங்காலமாய்க் கொண்டாடி மகிழ்கின்றார்கள். புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்.

    'புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.

    மலர இருக்கும் 'விசு வாவசு' ஆண்டில், மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி நிறையட்டும், எண்ணங்கள் ஈடேறட்டும், முயற்சிகள் முளைக்கட்டும், வெற்றிகள் பதியட்டும், புன்னகை பூக்கட்டும், மன நிறைவை வழங்கும் மங்கள ஆண்டாக அமையட்டும் என மனதார வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது இதயமார்ந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ×