என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அம்பேத்கர் சிலைக்கு தனித்தனியாக சென்று மாலை அணிவிக்கக் கூடாது- நிர்வாகிகளுக்கு த.வெ.க. உத்தரவு
    X

    அம்பேத்கர் சிலைக்கு தனித்தனியாக சென்று மாலை அணிவிக்கக் கூடாது- நிர்வாகிகளுக்கு த.வெ.க. உத்தரவு

    • பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
    • யாரும் தனித்தனியாக சென்று மாலை அணிவிக்க வேண்டாம்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நிர்வாகிகளுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நம் கட்சித் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் நமது கொள்கை தலைவர்களில் ஒருவரான இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான நாளை (14-ந்தேதி) அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் தங்கள் மாவட்டம் சார்பாக மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கண்டிப்பாக ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். யாரும் தனித்தனியாக சென்று மாலை அணிவிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×