என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    NDA கூட்டணி திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றும் - காலணி அணிந்தது குறித்து பதிவிட்ட அண்ணாமலை
    X

    NDA கூட்டணி திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றும் - காலணி அணிந்தது குறித்து பதிவிட்ட அண்ணாமலை

    • நான் உட்பட தமிழக பா.ஜ.க. சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.
    • அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று, உங்கள் அன்பு சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த சுமார் நான்கு மாதங்களாக, நான் உட்பட தமிழக பா.ஜ.க. சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.

    நேற்றைய தினம், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர், அன்பு அண்ணன் நயினார் நாகேந்திரனின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன்.

    என்னுடன் விரதம் மேற்கொண்டு வந்த தமிழக பா.ஜ.க சகோதர சகோதரிகள், வரும் நாட்களில், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கல்லையும் முள்ளையும் கடந்து பயணப்பட்டு, தங்கள் கடின உழைப்பை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, அண்ணன் நயினார் நாகேந்திரனின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று, உங்கள் அன்பு சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன்.

    வாழ்க தமிழ். வளர்க பாரதம்... என்று கூறியுள்ளார்.



    Next Story
    ×