என் மலர்
சென்னை
- பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
- இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சென்னை:
கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு மெட்ரோ ரெயில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக மெட்ரோ ரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.
மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியில் அடிப்படையில் இயங்கும்.
அதன்படி, பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
- அனைத்து தேவாலயங்களும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
- சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
சென்னை:
ஏசு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் விதமாக டிசம்பர் மாதம் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றை வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பலவிதமான ஸ்டார்களை தோரணங்களாக அமைத்து, ஏசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சிறிய குடில் முதல் ராட்சத குடில் வரை அமைக்கப்பட்டிருந்தது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து தேவாலயங்களும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஏசு கிறிஸ்து பூவுலகில் பிறந்த நற்செய்தியை வேளாங்கண்ணி பேராலய அதிபர் வாசித்தார். பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.
இதேபோல் சென்னை, புதுச்சேரி, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், தூத்துக்குடி, நாகை, கோவை போன்ற நகரங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமானோர் குடும்பங்களுடன் பங்கேற்றனர். அதன்பின் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைப் பரிமாறி அவர்கள் மகிழ்ந்தனர். பாதுகாப்பு பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- திமுகவின் கொள்கைகளை மேடைதோறும் கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா.
- திமுக கொண்ட கொள்கைக்காக சிறைக்கு செல்லவும் தயங்காதவர் நாகூர் ஹனீபா.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மரியாதையின் அடையாளம் நாகூர் ஹனீபா. உடலால் மறைந்தாலும் அவர் குரல் நம் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
கலைஞரும் நாகூர் ஹனீபாவும் நகமும் சதையும் போல் நட்புடன் பழகி வந்தனர்.
கல்லக்குடி கொண்ட கருணாநிதி பாடலை பட்டித்தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா.
கட்சியின் மீது ஒருவரால் இறுதிவரை இத்தனை ஈடுபாட்டுடன் இருக்க முடியும் என்பதற்கு நாகூர் ஹனீபா ஒரு உதாரணம்.
திமுகவின் கொள்கைகளை மேடைதோறும் கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா.
தனது இறுதி மூச்சுவரை மக்கள் பாடகராக வாழ்ந்தவர் நாகூர் ஹனீபா, திமுகவின் வளர்ச்சிக்கு அவர் குரல் துணை நின்றது.
இதை கற்கவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கான மேடைகளில் கோடிக்கணக்கான மக்களை தன் வசப்படுத்தியவர் நாகூர் ஹனீபா.
திமுக கொண்ட கொள்கைக்காக சிறைக்கு செல்லவும் தயங்காதவர் நாகூர் ஹனீபா.
13 வயது சிறுவனாக இருக்கும்போதே ராஜாஜிக்கு எதிராக கருப்புக்கொடி காட்சி சிறை சென்றவர் நாகூர் ஹனீபா.
1957 தேர்தலில் நாகூர் ஹனீபா வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அதன் பின்னர் மேலவை உறுப்பினராக்கப்பட்டார்.
நாகூர் ஹனீபா போல் திமுகவை வளர்த்தெடுக்கும் நபர்கள் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பயிர்களுக்கான நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
- இத்தொகையின் மூலம் 3.60 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
2024-2025ல் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு ரூ.289.63 கோடி நிதி ஒதிக்கி உள்ளது.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.289.63 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. இத்தொகையின் மூலம் 3.60 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
- அரசின் முடிவை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- 2024ம் ஆண்டு மட்டும் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்த ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர். மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கும் படிப்படியாக பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் முடிவை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.2024ம் ஆண்டு மட்டும் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் 4 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.14,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுவிட்டது என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
- தன்னம்பிக்கை, ஒழுக்கத்தை கற்பிப்பது விளையாட்டுதான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழக இளைஞர்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி நம்பிக்கை உண்டு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விளையாட்டு துறையின் சாதனை புரிந்த இளம் வீரர், வீராங்கனைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவுடன், வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அதில்,"Champion-ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, Pressure-ஐ handle பண்ணுற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும்தான் இருக்கு!
தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம Young Athletes-கூட பேசினப்போ, அவங்களோட Clarity-ஐயும் Confidence-ஐயும் பார்த்து மிரண்டு போயிட்டேன். Next Level Focus!
இவங்க வெறும் விளையாட்டை மட்டும் விளையாடல, நம்ம தமிழ்நாட்டோட Future Legacy-யை உருவாக்கிட்டு இருக்காங்க. இதனால்தான் நம்ம இளைஞர்கள் மேல எனக்கு எப்பவும் ஒரு தனி நம்பிக்கை உண்டு!" என்றார்.
- இது ஒரு வலிமையான எஃகு கோட்டை. எந்த கொம்பனாலும் துரும்பை கூட அசைத்துப் பார்க்க முடியாது.
- அதே நேரத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் கெடுபிடிகள் வந்திருக்கிறது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
எம்.ஜி.ஆர். ஒரு மாபெரும் தலைவர் என்றும் அவரது புகழ் ஒருபோதும் குறையவே குறையாது.
ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைப்பது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார்.
எடப்பாடி பழனிசாமியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது அவர்களுடைய கருத்தாகும். எங்கள் கருத்தை பொறுத்தவரை பொதுச்செயலாளர் உரிய நேரத்தில் சொல்வார் என்றார்.
குரங்கு கையில் இருக்கும் பூமாலை போல அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி பிய்த்து போட்டுக் கொண்டிருக்கிறார் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்த கருத்து பற்றி ஜெயக்குமார் கூறும்போது, அவர் சொல்வார்
இது (அ.தி.மு.க.) பூமாலை கிடையாது, இது கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். உதிர்ந்த செங்கற்கள் பற்றி பேச முடியாது. செங்கற்கள் என்பது வேறு. கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் என்பது வேறு. இது ஒரு வலிமையான எஃகு கோட்டை. எந்த கொம்பனாலும் துரும்பை கூட அசைத்துப் பார்க்க முடியாது.
100 நாள் வேலை திட்டத்திற்கு பெயர் மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
மகாத்மா காந்தியின் பெயரை மாற்றக்கூடாது என்பதை தெளிவுபடுத்தி விட்டோம், எங்கள் பொது செயலாளர் சொல்லி விட்டார். அதே நேரத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் கெடுபிடிகள் வந்திருக்கிறது. ஏழை மக்களுக்கு அது சிரமம் அதை மத்திய அரசாங்கம் மீண்டும் பரிசீலனை செய்து, முன்பு இருந்தது போல ஆக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு இல்லாத ஏழை எளிய மக்களுக்காகவே அந்த திட்டம் இருக்கிறது. அதை முழுமையாக சிதைக்காமல் உள்ளதை உள்ளபடி இருக்க வேண்டும் என்றார்.
- சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி.
- எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
சமூக நீதியின் முன்னோடி,
சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.
தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!
- ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்!
சென்னை:
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மேடவாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
MGNREGA-வை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்!
இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்! என்று கூறியுள்ளார்.
- உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
26-ந்தேதி மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
28 மற்றும் 29-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
30-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
24 மற்றும் 25-ந்தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 27ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
- டி.ஆர்.பாலு, அண்ணாமலை இருவரும் நேரில் ஆஜராகவில்லை.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த போது அண்ணாமலை, 'தி.மு.க. பைல்ஸ்' என்ற பெயரில் தி.மு.க. அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார்.
அதில், தி.மு.க. பொருளாளரும், எம்பி.யுமான டி.ஆர்.பாலு, அவரது மகனும் அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் டி.ஆர்.பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது தன்னுடைய பெயருக்கும் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில் டி.ஆர்.பாலுவின் 21 நிறுவனங்கள், சொத்துக்கள் தொடர்பாக அண்ணாமலை தரப்பில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஆர்.பாலு, அண்ணாமலை இருவரும் நேரில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இரு தரப்பிலும் ஆஜராகி இருந்த வக்கீல்கள் குறுக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளி வைக்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதி, குறுக்கு விசாரணையை ஜனவரி 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
- அ.தி.மு.க. என்பது பூமாலை அல்ல, கோபுரம். அதில் இருந்து உதிர்ந்த செங்கல் வைத்திலிங்கம்.
- 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இணைப்பு சாத்தியமில்லை என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை மெரினாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி விரைவில் பதில் அளிப்பார்.
* டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.
* அ.தி.மு.க. என்பது பூமாலை அல்ல, கோபுரம். அதில் இருந்து உதிர்ந்த செங்கல் வைத்திலிங்கம்.
* 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
* 100 நாள் வேலை திட்டம் ஏற்கனவே இருந்த நிலையில் தொடர்ந்தால் மக்களுக்கு நல்லதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.






