என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

#T20WorldCup மெரினா கடற்கரையில் இந்திய அணியின் அபார ஆட்டத்தை ரசிக்கும் பொதுமக்கள்
- அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
- 14-வது ஓவரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து 3 சிக்சர்கள் பறக்கவிட்டார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் மெக்கோன்சி நீக்கப்பட்டு டஃபி சேர்க்கப்பட்டார்.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அடுத்து சஞ்சு சாம்சன் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது, இதனால் இந்தியா 7.2 ஓவரில் 100 ரன்களைத் தொட்டது.
சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 33 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இந்தியா 11.3 ஓவரில் 150 ரன்களைத் தொட்டது.
ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து 3 சிக்சர்கள் பறக்கவிட்டார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 15 ஓவரில் 203 ரன்களைத் தொட்டது.
இந்நிலையில், ரசிகர்கள் டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டியை காணும் வகையில், மெரினா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டி ஒளிபரப்பை ஏராளமான ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.






