என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலத்தில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாப சாவு
Byமாலை மலர்13 May 2022 9:17 AM GMT (Updated: 13 May 2022 9:17 AM GMT)
சேலத்தில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பி. நாட்டாமங்கலம் சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46). பெயிண்டர். இவருக்கு ஜமுனாதேவி (42) என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
இன்று காலை 10 மணி அளவில் ஜமுனா தேவி வீட்டில் துணிகளை துவைத்து விட்டு, அவற்றை வீட்டு வாசலில் உள்ள கம்பியில் துணியை காய வைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது மின்கசிவு காரணமாக எதிர்பாராதவிதமாக அந்த கம்பியில் மின்சாரம் பரவி இருந்தது. இதை கவனிக்காமல் அதில் துணிகளை தொங்க விட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ஜமுனா தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜமுனா தேவியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துவைத்த துணியை காய வைக்க முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X