search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலத்தில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாப சாவு

    சேலத்தில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பி. நாட்டாமங்கலம் சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46). பெயிண்டர். இவருக்கு ஜமுனாதேவி   (42) என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். 

    இன்று காலை 10 மணி அளவில் ஜமுனா தேவி வீட்டில் துணிகளை துவைத்து விட்டு, அவற்றை  வீட்டு வாசலில் உள்ள கம்பியில் துணியை காய வைத்துக் கொண்டிருந்தார். 

    அப்போது மின்கசிவு காரணமாக  எதிர்பாராதவிதமாக அந்த கம்பியில் மின்சாரம் பரவி இருந்தது. இதை கவனிக்காமல் அதில் துணிகளை தொங்க விட்டபோது   மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ஜமுனா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்த தகவலின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  ஜமுனா தேவியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    துவைத்த துணியை காய வைக்க முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கி பெண்  உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.      
    Next Story
    ×