என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தனியார் ஆலையில் வடமாநில வாலிபர் தவறி விழுந்து சாவு
Byமாலை மலர்19 Feb 2022 9:46 AM GMT (Updated: 19 Feb 2022 9:46 AM GMT)
தனியார் ஆலையில் மேற்கூரையை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார்.
அன்னதானப்பட்டி:
சேலம் மணியனூர் நாட்டாமங்கலம் பகுதியில் தனியார் இரும்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது டேக்கா என்பவரது மகன் முகமது நவுசத் (வயது 23) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆலையில் பராமரிப்பு பணியின் போது பழுதடைந்த பழைய மேற்கூரையை மாற்றி புதிய மேற்கூரை அமைக்கும் பணியில் முகமது நவுசத் மற்றும் சக தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மேற்கூரையின் மீது அமர்ந்து இருந்த முகமது நவுசத் திடீரென்று ேமலே இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X