search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கமுதி அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பி கைது

    கமுதி அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள மண்டலமணிக்கம் காவல் நிலைய போலீசார் சின்ன உடப்பங்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அருகில் இருந்த சுடுகாட்டு பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த வாலிபர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.

    அவர்களிடம் வாள் மற்றும் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் பிடித்து மண்டலமாணிக்கம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகவேல் விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம் 2 வாலிபர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, கத்தியை காட்டி மிரட்டினர்.

    இதனையடுத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் சின்ன உடப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகளான மனோஜ்குமார் (22), வினோத் (17) ஆகிய இருவரையும் மண்டல மணிக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×