என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கமுதி அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பி கைது
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள மண்டலமணிக்கம் காவல் நிலைய போலீசார் சின்ன உடப்பங்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அருகில் இருந்த சுடுகாட்டு பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த வாலிபர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் வாள் மற்றும் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் பிடித்து மண்டலமாணிக்கம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகவேல் விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம் 2 வாலிபர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, கத்தியை காட்டி மிரட்டினர்.
இதனையடுத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் சின்ன உடப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகளான மனோஜ்குமார் (22), வினோத் (17) ஆகிய இருவரையும் மண்டல மணிக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்