search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்ஆர் தனபாலன்
    X
    என்ஆர் தனபாலன்

    ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த என்.ஆர்.தனபாலன்

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக போட்டியின்றி தேர்வான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் இணைந்து வழி நடத்தி வந்த எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையை ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. தொண்டர்கள் மீண்டும் அவர்களின் தலைமையின் கீழ் செயல்படவும், அவர்களின் வழிகாட்டுதலின்படி கட்சியை வளர்த்திடவும் அவர்களுக்கு பேராதரவு கொடுத்துள்ளனர் என்பது பெருமைக்குரியதாகும்.

    இரட்டை தலைமை என்ற விமர்சனங்களுக்கு இடையே 1 கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் நம்பிக்கையையும், ஏகோபித்த பேராதரவையும் பெற்று மீண்டும் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக போட்டியின்றி தேர்வான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியின்றி தேர்வான எடப்பாடி கே.பழனிசாமிக்கும், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×