என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது- வானிலை ஆய்வு மையம்
Byமாலை மலர்25 Oct 2021 10:12 AM GMT (Updated: 25 Oct 2021 12:57 PM GMT)
நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கரூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவற்றின் மூலம் அதிக மழை பெய்யும்.
ஏற்கனவே தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி நாட்டின் பல பகுதிகளிலும் அதிகமாக மழை கொட்டியது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுசம்பந்தமாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெற்கு ஆந்திரா ஆகியவற்றில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.
அக்டோபர் 28-ந் தேதி பருவமழை தொடங்கும் என்று அறிவித்திருந்த நிலையில் இன்றே பருவமழை தொடங்கி உள்ளது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கரூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும். வடகிழக்கு பருவமழை இயல்பாகவே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவற்றின் மூலம் அதிக மழை பெய்யும்.
ஏற்கனவே தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி நாட்டின் பல பகுதிகளிலும் அதிகமாக மழை கொட்டியது.
மேற்கு பகுதி மாநிலங்கள், மத்திய மற்றும் வட மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் அதிக மழை பெய்து இருக்கிறது. தென்மேற்கு பருவமழை சில நாட்களுக்கு முன்புதான் ஓய்ந்தது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுசம்பந்தமாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெற்கு ஆந்திரா ஆகியவற்றில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.
அக்டோபர் 28-ந் தேதி பருவமழை தொடங்கும் என்று அறிவித்திருந்த நிலையில் இன்றே பருவமழை தொடங்கி உள்ளது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கரூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும். வடகிழக்கு பருவமழை இயல்பாகவே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X