search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நெல்லை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர் கைது

    நெல்லை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த வெங்கடாசலபுரம் கிராமத்தில் படலை அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள உண்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். இது தொடர்பாக வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த கோவில் நிர்வாகி கொம்பையா (வயது 63), கங்கை கொண்டான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது தெற்கு பட்டியைச் சேர்ந்த மாடசாமி (32) என்ற வாலிபர் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்து தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் திருட்டு சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளாரா என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×