search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரை வரவேற்ற சபாநாயகர்
    X
    கவர்னரை வரவேற்ற சபாநாயகர்

    ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்த பின்னர் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை பிடித்த பின்னர் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையில் பல்வேறு முக்கிய அம்சங்களை இடம் பெற்றிருந்தன.

    முக ஸ்டாலின்

    இந்நிலையில் 16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 24ந்தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வரும் 24ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் உரைக்கு பதில் உரை வழங்குவார்.
    Next Story
    ×