என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
Byமாலை மலர்17 Dec 2020 7:49 AM GMT (Updated: 17 Dec 2020 7:49 AM GMT)
கிறிஸ்துமஸ் விழாவில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பெரு விழாவை சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க. ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. சார்பில் வருகின்ற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும், மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கிறிஸ்துமஸ் விழாவில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதனால் விழாவை பிரமாண்டமாக நடத்த அ.தி.மு.க. ஏற்பாடு செய்து வருகிறது.
அ.தி.மு.க. கிறிஸ்துமஸ் விழா கொண்டாடும் இதே தேதியில் தான் (20-ந்தேதி) தி.மு.க.வும் சென்னையில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடுகிறது. கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மயிலாப்பூர் சாந்தோமில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பெரு விழாவை சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க. ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. சார்பில் வருகின்ற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும், மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கிறிஸ்துமஸ் விழாவில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதனால் விழாவை பிரமாண்டமாக நடத்த அ.தி.மு.க. ஏற்பாடு செய்து வருகிறது.
அ.தி.மு.க. கிறிஸ்துமஸ் விழா கொண்டாடும் இதே தேதியில் தான் (20-ந்தேதி) தி.மு.க.வும் சென்னையில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடுகிறது. கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மயிலாப்பூர் சாந்தோமில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X