search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் உதயகுமார்
    X
    அமைச்சர் உதயகுமார்

    விரைவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும்- அமைச்சர் உதயகுமார்

    குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணி மிக விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டி பல்வேறு இடங்களில் இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:

    மின்கட்டணம் குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்த நிலையில் தேவையின்றி திமுக போராட்டம் நடத்துகிறது. மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே திமுக போராட்டம் நடத்துகிறது.

    தமிழ்நாடு முழுவதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் போர்க்கால பன்முக நடவடிக்கைகளால் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகள் இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் தான் எடுக்கப்படுகிறது. தினசரி 50 ஆயிரம் பேர் வரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது.

    மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணி மிக விரைவில் தொடங்கப்படும். குறைந்த விலையில் தரமான மாஸ்க் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×