search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் கடை"

    • ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது.
    • பாமாயில் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும்.

    பல்லடம்:

    ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக்கோரி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக திருப்பூர் -கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    இந்தியா விவசாய நாடு, விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. ஆனால் 72 சதவீதம் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதியாகும் அவலம் உள்ளது. உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்பு, உள்நாட்டு எண்ணெய் வித்துக்களான தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு ஊக்குவிப்பு செய்யாமல், மானியம் வழங்காமல், இந்தோனேசிய- மலேசியா பாமாயிலை லிட்டர் ரூ. 100க்கு மத்திய, மாநில அரசுகள் வாங்கி ரூ.30க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்கின்றனர். அதாவது ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் மானியம் கொடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

    ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது. ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ரூ.1500 கோடிகளை மானியமாக பாமாயில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.

    கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தி.மு.க., 66-வது வாக்குறுதியாக தேங்காய் எண்ணெய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பாமாயிலை தடை செய்து, நன்மை விளைவிக்கும் உள்நாட்டு எண்ணெய்களை விற்பனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தென்னை விவசாயிகளாலும், விவசாய சங்கங்களாலும் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

    கடந்த 2019ல் ரூ.20 க்கு விற்பனையை கொண்டு இருந்த தேங்காய் தற்போது ரூ.10க்கு மட்டுமே விற்பனையாவதால் 22 மாவட்டங்களில் உள்ள தமிழ்நாட்டின் 20 லட்சம் தென்னை விவசாயிகள் மிகக் கடுமையான நஷ்டத்தில் உள்ளார்கள். நிலக்கடலை விவசாயிகள் பறிக்கும் கூலி கூட கிடைக்காமல் கடும் கஷ்டத்தில் உள்ளார்கள்.

    எனவே பாமாயில் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும். தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் .

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரேசன் அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
    • பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு விளக்கம்.

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது 2.23 கோடி ரேசன் அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34 ஆயிரத்து 793 ரேசன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பேர் பயன் பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். மொத்தம் உள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் அந்தி யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும் முன்னுரிமை பெற்ற 95.67 லட்சம் குடும்ப அட்டைகளும் உள்ளன. 'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் தமிழ்நாட் டில் செயல்படுத்தப்பட்டு வருவதால், உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது.

    ரேசன் பொருட்களும் கைரேகை பதிவு மூலம் வழங்கப்படுவதால் யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை உள்ளது.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரேசன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கை விரல் ரேகையை ரேசன் கடையில் பதிவு செய்ய வேண்டும் என்று கடைக்காரர்கள் வலியுறுத்தி வந்தனர்.


    இதில் சிலர் மட்டும்தான் கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். இன்னும் ஏராளமானோர் கைவிரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது ரேஷன் அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த மாதம் ரேசன் பொருளை முழுமையாக தர மாட்டோம். குறைத்து விடுவோம் என்று கராராக இப்போது கூறி வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி விரல் ரேகை வைக்காத உறுப்பினரின் பெயரை ரேசன் அட்டையில் இருந்து எடுத்து விடுவோம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். வீட்டில் உள்ள வயதானவர்களை எப்படி ரேசன் கடைக்கு அழைத்து செல்வது, ஆஸ்பத்திரியில் இருப்பவர்களை ஆம்புலன்சில் கொண்டு வந்தா விரல் ரேகையை பதிவு செய்ய முடியும் என்று ரேசன் கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்து வந்தனர்.

    பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு இப்போது விளக்கம் அளித்து உள்ளது.

    இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரி பார்ப்பு தொடர்பாக மாவட்டங்களுக்கு ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சமயத்தில் நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை முடிக்க பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

    * நியாய விலை கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களது கைவிரல் ரேகை வைக்கப்படும் போது ஆவணங்கள் ஏதும் கோரக் கூடாது.


    * குடும்ப அட்டைதாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல்களை வழங்கப்படக் கூடாது.

    * குடும்ப அட்டைதாரர்களின் வசதியின்படி, நியாய விலை கடைக்கு வருகை தந்து கை விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, அவர்களை கட்டாயப்படுத்தி நியாயவிலை கடைக்கு வர வழைத்து சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது.

    நியாய விலை கடையில் விற்பனை முடிந்த பிறகு குடும்ப அட்டைதாரர்களது வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் கை விரல் ரேகை வைக்கும் பணியினை முடிக்கலாம்.

    மேற்கூறியவாறு, அறிவுரைகளை பின்பற்றி கை விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை, பயனாளிகளுக்கு எவ்வித இடையூறுகள் இல்லாமலும், குழப்பங்கள் ஏதும் இல்லாமலும் முடிக்கப்பட நியாய விலை கடை பணியாளர்களை அறிவுறுத்துமாறும் அப்பணியினை மேற்பார்வையிட சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்து மாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த உத்தரவின் நகல் ரேசன் கடைகளின் உயர் அதிகாரிகளுக்கும் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • களப்பணியாற்றி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த உதவிய பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது.
    • ஊக்கத்தொகையை பணியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பல்வேறு கட்டங்களாக தேர்வான 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு ஒவ்வொரு மாதம் 15-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக மேற்கொண்ட சிறப்பு பணிக்காக, ரேசன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அரசு அறிவித்துள்ளது.

    திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த உதவிய ரேசன் கடை பணியாளர்களுக்கு, குடும்ப அட்டைகளுக்கு தலா 50 பைசா என கணக்கிட்டு ஊக்கத்தொகையை பணியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    களப்பணியாற்றி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த உதவிய பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது.

    • சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
    • போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    களியக்காவிளை:

    களியக்காவிளை அருகே திருத்தோபுரம் காக்கோட்டு விளை பகுதியில் ரேசன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று 2-வது நாளாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு ரேசன் கடை ஊழியர் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இன்று அதிகாலை ரேசன் கடையில் இருந்து புகை மண்டலங்கள் வந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் ரேசன் கடை ஊழியர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஊழியர்கள் அங்கு வந்தனர். அப்போது ரேசன் கடையில் தீ எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும், களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ரேசன் கடையின் பூட்டை உடைத்து தீயை அணைத்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் ரேசன் கடையில் இருந்த ஆவணங்கள், பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்கப்பட இருந்த வேட்டி, சேலைகள் எரிந்து நாசமாகி இருந்தது. ரேசன் கடையில் தீ விபத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் எரிந்து நாசமானது குறித்து ரேசன் கடை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்குவதற்கு இன்று காலையிலும் பொதுமக்கள் வந்திருந்தனர். கடையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

    • கருவூலத்தை நிரப்பும் முயற்சியில் தி.மு.க. இறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
    • தரமான துவரம் பருப்பினை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நியாய விலைக் கடைகள் மூலம் கூடுதலாக உளுத்தம் பருப்பு வழங்கப்படும், சர்க்கரை வழங்கப்படும் என்றெல்லாம் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளாக அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும் மேற்படி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக, துவரம் பருப்பிற்கு பதிலாக தரமற்ற, மஞ்சள் பருப்பை அதிக விலைக்கு வாங்கி வழங்க முயற்சித்து வருகிறது. இதன்மூலம் தங்கள் கருவூலத்தை நிரப்பும் முயற்சியில் தி.மு.க. இறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

    மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், அரசுக்கு ஏற்படும் இழப்பினைக் கருத்தில் கொண்டும், வெளிப்படையான முறையில், குறைந்த விலையில், தரமான துவரம் பருப்பினை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தரமற்ற மஞ்சள் பருப்பினை வாங்கி வழங்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேசன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் ஹில்லி அக்வா என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சுமார் 2 ஆயிரம் ரேசன் கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் உள்ள ரேசன் கடைகளில் மக்களுக்கு வங்கி மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    ரேசன் கடைகள் மூலம் கூடுதல் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக கே-ஸ்டோர்கள் என மறுபெயரிடவும் கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேசன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கே-ஸ்டோர்கள் தொடங்கப்பட்ட பிறகு அதன் மூலமாக ரூ10ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகள், பயன்பாட்டு பில் செலுத்துதல் (மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்பட), 5கிலோ எடையுள்ள சிறிய எல்.பி.ஜி. சிலிண்டர்கள், சபரி மற்றும் மில்மா தயாரிப்புகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் பொது மக்களுக்கு கிடைக்கும்.

    இந்நிலையில் ரேசன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு வழங்கப்படும். மாநில நீர்ப்பாசன துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் ஹில்லி அக்வா என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.

    இந்த தண்ணீர் பாட்டில் வெளிச்சந்தையில் இது ரூ15 வரை விற்கப்படுகிறது. சபரிமலை சீசனை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக கோட்டயம், இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு அறிமுகப்படுததப்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளிலும் தண்ணீர்பாட்டில் விற்பனையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • ராஜா எம்.எல்.ஏ. ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன், ஆசிரியர் சாமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு பனவடலி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ஏசுதாஸ், கூட்டுறவு சங்க தனி அலுவலர் செல்வகணேஷ் மற்றும் சுரேஷ் பனவடலிசத்திரம் கூட்டுறவு சங்க செயலாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன், ஆசிரியர் சாமியா, ராசா, வெளியப்பன், கருப்பசாமி, ஜலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் ஞாயிறு விடுமுறை இல்லை
    • அனைத்து பொருட்களையும் இருப்பு வைத்துக் கொள்ள வலியுறுத்தல்

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வருகிற 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் இயங்கும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    அனைத்து பொருட்களையும் வழங்கும் வகையில், அனைத்து பொருட்களையும் இருப்பு வைத்துக் கொள்ள ரேசன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படடுள்ளது.

    • ரேசன் கடைக்கு ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
    • விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஆழ்வார்குறிச்சி:

    கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி அழகம்மாள் புரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்

    ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், ரேசன் கடைக்கு ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

    இதில் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் சாருகலா ரவி, மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி ரஞ்சித், ஏ.பி..நாடானூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை, ஐந்தாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதி பெரியசாமி, வெங்காடம்பட்டி மன்ற செயலாளர் பாரத், அழகம்மாள்புரம், முத்தம்மாள்புரம், சங்கரலிங்கபுரம் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மலைவாழ் மக்கள் தங்கள் பகுதியில் புதியதாக ஒரு ரேசன் கடை அமைத்துதர வேண்டும் என்று கோரிக்கை
    • ரெமோன் மனோதங்கராஜ் திறந்து வைத்தும், முதல் விற்பனையை தொடங்கியும் வைத்தார்.

    திருவட்டார் :

    சுருளோடு ஊராட்சிக்குட்பட்ட கூவக்காட்டுமலை மலைவாழ் மக்கள் தங்கள் பகுதியில் புதியதாக ஒரு ரேசன் கடை அமைத்துதர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் மனோதங்கராஜ் ஏற்பாட்டில் அந்த பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் புதிய ரேசன் கடையை சுருளகோடு ஊராட்சி மன்ற தலைவர் விமலாசுரேஷ் தலைமையில் வார்டு உறுப்பினர் சாந்தி முன்னிலையில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ் திறந்து வைத்தும், முதல் விற்பனையை தொடங்கியும் வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொன்மனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்னயோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக பெறப்படும் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • கடந்த 2-ந்தேதியில் இருந்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ரேசன் கடைகளில் முன்னுரிமை குடும்ப அட்டைகள், அன்னயோஜனா குடும்ப அட்டைகளுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ முதல் 35 கிலோ வரை அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு சிலர் இலவச அரிசியை பெறுவது இல்லை. அந்த அரிசி முறைகேடாக வெளி மார்க்கெட்டுக்கு செல்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க தற்போது புதிய உத்தரவு அனைத்து ரேசன் கடை பணியாளர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி முன்னுரிமை, அன்னயோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக பெறப்படும் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது குடும்பத்தில் ஒருவரின் ஆதார் எண் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளது. இனி குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் எண்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 2-ந்தேதியில் இருந்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதன்மூலம் இலவச அரிசி பெற்ற குடும்பத்தில் உள்ளவர்கள் யாரேனும் இறந்தவர்கள், அரிசின் சலுகையை பெறாதவர்கள் விவரம் தெரியவரும். இதனால் அரசு வழங்கும் இலவச அரிசி விரயம் ஆகாமல் தடுப்பதோடு முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்ற அடிப்படையில் ஆதார் பதிவு அவசியமாக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறும்போது, "இறந்தவர்கள் விவரங்களை கூறி பெயரை நீக்குவது இல்லை. சிலர் இலவச அரிசியை வாங்குவது இல்லை. ஆனால் அவர்களின் பெயரில் அரிசி வாங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க அனைவரின் ஆதார் எண்களையும் பதிவு செய்ய கூறுகிறோம். குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக வந்து பதிவு செய்து அரிசி, கோதுமையை பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.

    கடந்த மாதத்தில் இருந்து ரேசன் கடைகளில் ரேசன் பொருட்களை வாங்குவதற்கு யு.பி.ஐ. பணம் செலுத்தும் முறை நடை முறைப்படுத்தப்பட்டு உள்ளது. ரேசன் கடைகளில் உள்ள யு.பி.ஐ. எண்ணை பொதுமக்கள் தங்கள் செல்போனில் ஸ்கேனிங் செய்து பணம் செலுத்தலாம். இந்த வசதி சென்னையில் ஒவ்வொரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது.

    • பூதப்பாண்டி பகுதியிலுள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் கருணாநிதி
    • காரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி பகுதியிலுள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் கருணாநிதி (வயது 40). இவர் உடல் நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று மாயமாகி விட்டார். அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் நிலையில் உள்ளது. இதுகுறித்து அவரது தந்தை பூதப்பாண்டி போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×