என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Opening of ration shop"
- எம்.எல்.ஏ., மேயர் பங்கேற்பு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட மாதாகோவில்தெரு திரு.வி.க.நகர், மூலக் கொல்லை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ரங்காபுரத்தில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
மூலக்கொல்லை பகுதியில் புதியதாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது மூலக் கொல்லை பகுதியில் பகுதி நேர ரேசன் கடை தொடங்கப்பட்டுள்ளது. இதனை கார்த்திகேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் பூமா, கவுன்சிலர்கள் சுதாகர், கணேஷ்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் கொண்ட ரேசன் கடைகள் இரண்டாக பிரிக்கப்படுகிறது.
அதன்படி ரங்காபுரத்தில் உள்ள கடையில் 1,521 அட்டைதாரர்கள் இருந்தனர். அதில் 521 அட்டைதாரர்கள் மூலக்கொல்லை, திரு.வி.க.நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்.
அவர்களின் வசதிக்காக மூலக்கொல்லை பகுதியில் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் பெண்கள் பணிபுரிய உள்ளனர்.
இதே போன்று மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் உள்ள ரேஷன் கடைகள் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 33 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 732 ரேசன் கடைகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி ரேசன் கடையை திறந்து வைத்தார்.
- ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொன்நகரில் ரேசன் கடை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்தனர்.
சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் ஆகியோரின் முயற்சியால் பொன்நகரில் பகுதிநேர ரேசன் கடை திறக்கப்பட்டது. காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி ரேசன் கடையை திறந்து வைத்தார்.
சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் முன்னிலை வகித்தனர்.
சாக்கோட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் முத்துராமலிங்கம், சாக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் அன்பரசன், ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, குடிமைப்பொருள் தாசில்தார் ஜெயநிர்மலா, பொன்.துரைசிங்கம், செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்