search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக ஆர்ப்பாட்டம்"

    • கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3,076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டு உள்ளனர்.
    • ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சிறைபிடித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3,076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டு உள்ளனர். 534 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரியும், மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ராமேசுவரம் பஸ் நிலையத்தில் முன்பு இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமை தாங்கி பேசினார். மாநில மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கனக்கான மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்தும், மீனவர்களை வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ., செ.முருகேசன் எம்.எல்.ஏ. மற்றும் 6 மாவட்டங்களை சார்ந்த மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீனவ மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது.
    • கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி 11ம் தேதி அன்று ராமேஸ்வரத்தில் திமுக மீனவரணி சார்பில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இலங்கை கடற்படையினரால் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர். 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன.

    இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்தும் மீனவர் நலன் குறித்தும் தமிழக முதல்வர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.

    ஆனாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது. இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்.11 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் ராமேஸ்வரத்தில், திமுக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×