search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    மதுக்கடை திறப்பு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல -அமைச்சர் செல்லூர் ராஜூ

    தமிழகத்தில் நாளை மறுநாள் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
    மதுரை:

    தமிழகத்தில் நாளை மறுநாள் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

    மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-

    தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் முடிவு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல. பொருளாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு.

    கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காகவும், வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுப்பதற்காகவும்தான் மதுபானக்கடைகளை திறக்க முடிவு. சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×