search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் பறிப்பு
    X
    செல்போன் பறிப்பு

    திருச்சி அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது

    திருச்சி அருகே செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் (வயது 39).இவர் காய்கனி மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர்அப்துல் காதர் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்போன் திருடிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருச்சி ஜெயில்பேட்டை பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (20)என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×