search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு- கூடங்குளத்தில் 3 வாலிபர்கள் கைது

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய கூடங்குளத்தை சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் பக்கங்களில் அவதூறாக கருத்து பரவியது. இது தொடர்பாக கூடங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யநாதன் அளித்த புகாரின் பேரில் கூடங்குளத்தை சேர்ந்த கணேசன், ஜெகன் மற்றும் அஞ்சு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் 3 பேரும் சமூக வலைதளங்களில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசி அந்த ஆடியோவை வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் பக்கங்களில் பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×