என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் வாலிபரை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு
மதுரை:
மதுரை களிமங்கலம் கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் முகமது அபுபக்கர். இவரது மகன் முகமது அசன் அதில் (வயது 19).
இவர் வண்டியூர் ரிங் ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சிலர் கத்தி முனையில் வழிமறித்தனர். அவர்கள் முகமது அசன் அதிலை தாக்கியதோடு மோட்டார் சைக்கிள், ரூ.4 ஆயிரம் செல்போன் மற்றும் கைக் கடிகாரத்தை பறித்துச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முகமது அசன் அதில், அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நரிமேடு சோனையா கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 64). இவர் நேற்று இரவு நடந்து சென்றார். அப்போது 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-யை பறித்துச் சென்றனர்.
இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதில் வழிப்பறியில் ஈடுபட்டதாக ராஜா (22), விக்னேஷ் வரன் (20), விஜய் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்