என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தல் புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் -தேர்தல் ஆணையம்
Byமாலை மலர்6 Dec 2019 7:09 AM GMT (Updated: 6 Dec 2019 7:09 AM GMT)
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்து புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந் தேதி அறிவித்தது. ஆனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தொகுதி மறுவரைறையை முடிக்காமல் தேர்தலை நடத்தக்கூடாது என திமுக வலியுறுத்தியது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவால், தேர்தலை நடத்துவதற்கான தடைகள் நீங்கி உள்ளன.
எனவே, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X