என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே விபத்து: முன்னாள் ராணுவ வீரர் பலி
Byமாலை மலர்4 Nov 2019 9:52 AM GMT (Updated: 4 Nov 2019 9:52 AM GMT)
திருமங்கலம் அருகே விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை கே.புதூர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 62). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று தனது மனைவி உமா கல்யாணி, மகன் ஜான்ரூபன், மகள் ஜெரோனி, உறவினர் லதா ராணி ஆகியோருடன் திருமங்கலத்துக்கு காரில் புறப்பட்டார்.
தனக்கன்குளம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றனர்.
அப்போது திருமங்கலத்தில் இருந்து மாட்டுத்தாவணி சென்ற அரசு பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
உமா கல்யாணி, ஜான் ரூபன், ஜெரோனி, லதா ராணி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X