என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திமுக மீதான வெறுப்பால் அதிமுக வெற்றி பெற்றுள்ளது - ஜிகே மணி
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வி.பன்னீர் செல்வம் இல்ல திருமண விழா இன்று சேலத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதையடுத்து ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளது. இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.
தி.மு.க.வினர் அ.தி.மு.க.- பா.ம.க. மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தனர். இதனால் தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதால் அ.தி.மு.க. இந்த சாதனை வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்சினையில் பா.ம.க.வை தி.மு.க. தவறாக விமர்சனம் செய்தது. தற்போது பஞ்சமி நிலம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையில் உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என பா.ம.க. ஏற்கனவே வற்புறுத்தி உள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்தப்படும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடம் இருந்து அதற்கான நிதிளை பெற முடியாத சூழல் நிலவுகிறது. நீட் தேர்வு பிரச்சினையில் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வை தொடர்ந்து பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்