என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெட்டப்பாக்கத்தில் செல்போனில் பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்
Byமாலை மலர்16 Oct 2019 2:43 PM GMT (Updated: 16 Oct 2019 2:43 PM GMT)
நெட்டப்பாக்கத்தில் செல்போனில் பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கத்தை அடுத்த பண்டசோழநல்லூர் புதுகாலணியை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் சுபலட்சுமி (வயது 19) அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவி. இதே பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (29) திருமணமானவர். இவர் பெயிண்ட் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதால் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று சுபலட்சுமி இளங்கோவிடம் பேசமறுத்து விட்டார்.
இதில் ஆத்திரமடைந்த இளங்கோ தன்னிடம் பேசும்படி சுபலட்சுமியை வற்புறுத்தி வந்தார். மேலும் சுபலட்சுமியின் வீட்டிற்கு சென்ற இளங்கோ வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்தார். இதனை தட்டிக்கேட்ட சுபலட்சுமியையும், அவரது தாய் நாககன்னி, அவரது அக்காள் வைத்தீஸ்வரி ஆகிய 3 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டார்.
பின்னர், இதுகுறித்து சுபலட்சுமி நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விபல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X