search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விருதுநகரில் செல்போன் கடையில் திருடிய 4 சிறுவர்கள் கைது

    விருதுநகரில் செல்போன் கடையில் திருடியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் முத்துராமன் பட்டியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவர் அருப்புக்கோட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    இங்கு கடந்த வாரம் யாரோ சிலர் நுழைந்து 40 செல்போன்கள் மற்றும் ரூ.12 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் வினோத் புகார் செய்தார்.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடைக்குள் புகுந்து செல்போன்கள் திருடியதாக, 16 வயது சிறுவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×