search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பல்வேறு மாவட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - தமிழக அரசு அதிரடி
    X

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பல்வேறு மாவட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - தமிழக அரசு அதிரடி

    பல்வேறு மாவட்டங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. #TNGovt #JactoGeo
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 

    இந்த போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 14 ஆசிரியர்கள் உட்பட 15 பேரை சஸ்பெண்ட செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதேபோல், திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்ட 6 ஆசிரியர்களும், நாமக்கல் மாவட்டத்தில் 57 ஆசிரியர்களும், விருதுநகரில் 22 ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #TNGovt #JactoGeo
    Next Story
    ×