search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கழிவு நீர் செல்வதில் தகராறு- இளம்பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
    X

    கழிவு நீர் செல்வதில் தகராறு- இளம்பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

    திருச்சியில் கழிவு நீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி வரகனேரி காமராஜர் நகரை சேர்ந்தவர் ரெங்கராஜன். இவரது மனைவி மனோரஞ்சிதம் (வயது 38).
    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது வீட்டின் வாசல் வழியாக மனோரஞ்சிதத்தின் வீட்டின் கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கழிவு நீர் கால்வாய் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில் இது தொடர்பாக அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் சரண்யா, வீரராஜ், சுகன்ராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் மனோ ரஞ்சிதத்தை  சராமாரியாக தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பன், சுகன்ராஜ் ஆகிய 2பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளசரண்யா, வீரராஜை தேடி வருகிறார்கள். #tamilnews 
    Next Story
    ×