என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மாணவியின் உறவினர் தாக்கியதால் அவமானம்: பள்ளி காவலாளி தற்கொலை
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த தளக்கான் சேரியை சேர்ந்தவர் முனுசாமி (65). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் இந்த பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் ஒரு மாணவியை பள்ளி வேனில் இருந்து கீழே இறக்கிவிட்டார்.
அந்த மாணவியின் அக்கிளில் கைவைத்து இறக்கி விட்டதாக மாணவியின் உறவினர் அவரிடம் தகராறு செய்தனர். அவரை தாக்கிய தாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவமானமும், மனவேதனையும் அடைந்த முனுசாமி சில நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் இன்று அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆத்திரம் அடைந்த அவருடையை உறவினர்கள் காவலாளி முனுசாமி உடலை பள்ளி முன்பு வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். காவலாளியை தாக்கியவர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதையடுத்து திருவள்ளூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். காவலாளியின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர்.
அதன்பிறகு காவலாளி முனுசாமி உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்