search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது குடிக்க பணம் தராததால் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்
    X

    மது குடிக்க பணம் தராததால் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்

    புதுக்கோட்டை அருகே மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பெருங்களூரை சேர்ந்தவர் சேகர் (வயது 50), விவசாயி. இவருக்கு மணிகண்டன், அருண் (27) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    இதில் அருண் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு திரிந்துள்ளார். தந்தை சேகரிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பல முறை கண்டித்த சேகர் குடிப்பழக்கத்தை கைவிட்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறி வந்தார். ஆனால் அருண் அதனை கண்டுகொள்ளவில்லை.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அருண் தந்தை சேகரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சேகர் பணம் இல்லை என கூறி திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அருண் அருகில் கிடந்த அரிவாளால் தந்தை என்றும் பாராமல் சேகரை பலமாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சேகர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிசிக்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேகரின் மூத்த மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கந்தர்வக்கோட்டை போலீசார், தந்தையை வெட்டிக்கொன்ற அருணை கைது செய்தனர். தொடந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×