என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.நா சபைக்கே சென்றாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
Byமாலை மலர்1 Jun 2018 4:25 AM GMT (Updated: 1 Jun 2018 4:25 AM GMT)
ஸ்டைர்லைட் ஆலை திறப்புக்கு யார் காரணம்? என விவாதிக்க தயார் என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், ஒருநாள் அல்ல ஆண்டு முழுவதும் விவாதிக்க தயார் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். #Sterlite #DJayaKumar #MKStalin
சென்னை:
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டதாக சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க நானும், திமுக எம்எல்ஏக்களும் தயாராக உள்ளோம். முதல்வர் தயாராக உள்ளாரா என்பதை தெரிவிக்கட்டும்” என கூறியிருந்தார்.
மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்தால், சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக பங்கேற்க தயார்” எனவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம் என்பது குறித்து, வருடம் முழுவதும் விவாதிக்க தயாராக உள்ளோம். ஸ்டாலின் தயாராக உள்ளாரா?. சட்டப்பேரவைக்கு வந்து திமுக பேசட்டும். அவர்களது துரோகத்தை நாங்கள் கூறுகிறோம்” என்றார்.
மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மூடியதுதான், அரசாணை எங்கே போனாலும் செல்லும். ஐநா சபைக்கே சென்றாலும் இனி ஆலையை திறக்க முடியாது” என ஜெயக்குமார் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X