search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை சந்தேகத்தை எழுப்புகிறது- திருமாவளவன்
    X

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை சந்தேகத்தை எழுப்புகிறது- திருமாவளவன்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை சந்தேகத்தை எழுப்புகிறது என திருமாவளவன் கூறியுள்ளார். #thoothukudiProtest #thirumavalavan #SterliteShutdown
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தாலும் ஆதாரங்களோ, காரணங்களோ குறிப்பிடப்படாமல் அது வெளியிட்டுள்ள அரசாணை சந்தேகத்தை எழுப்புகிறது. ஆலையை மூடுவதற்கு வேறு எந்த விரிவான காரணமும் அரசாணையில் இல்லை. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் எளிதாக தடை ஆணை பெற்றுவிடும். அதற்கு வழி வகுப்பதாகவே இந்த அரசாணை உள்ளது.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பிலும் கூட விரிவான காரணங்களையோ, ஆலையை மூடுவதற்கான ஆதாரங்களையோ அளிக்கவில்லை. இந்தநிலையில் அதை அப்படியே ஏற்று ஒப்புதல் அளித்திருப்பது தமிழக அரசின் நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தான் தமிழக அரசின் நோக்கம் என்றால் அதற்கான விரிவான ஆதாரங்களைக் கொண்ட அரசாணையை வெளியிட்டிருக்க வேண்டும்.



    அப்படிச் செய்யாதது ஏன்? தமிழக அரசு தற்போது செய்திருப்பது போராட்டக்காரர்களையும் எதிர்க்கட்சிகளையும் திசை திருப்புவதற்காகவும், வழக்கம்போல ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறுவதற்கு வசதி செய்வதற்காகவுமான தந்திரம் ஆகும். இதற்கு தமிழக அரசு உரிய விளக்கத்தை அளிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #thoothukudiProtest #thirumavalavan #SterliteShutdown
    Next Story
    ×