என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி காதலனுடன் தர்மபுரி கோர்ட்டில் ஆஜர் காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி காதலனுடன் தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்](https://img.maalaimalar.com/Articles/2018/Jan/201801081710068727_college-girl-student-appear-in-dharmapuri-court_SECVPF.gif)
X
காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி காதலனுடன் தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்
By
மாலை மலர்8 Jan 2018 11:40 AM GMT (Updated: 8 Jan 2018 11:40 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி காதலுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் காதல் ஜோடி ராஜ்குமார்- கல்லூரி மாணவி பிரியங்கா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு பிரியங்காவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். மகள் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். இந்த பிரச்சனையால் நல்லம்பள்ளியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. தற்போது அங்கு அமைதி திரும்பி வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை பிரியங்கா மற்றும் ராஜ்குமாரை போலீசார் தர்மபுரி இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவர் பிரியங்கா மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்தார். அந்த வாக்குமூலத்தில அவர் கூறி இருப்பதாவது:-
நானும் ராஜ்குமாரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நானாக விருப்பப்பட்டு ராஜ்குமாரை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டேன். அவர் என்னை கடத்தி செல்லவில்லை, அவரும், நானும் அரூரை அடுத்த புங்கனன்புதூரில் உள்ள ஒருவர் வீட்டில் தங்கி இருந்தோம். நான் மேஜர் என்பதால் எனக்கு சுயமாக முடிவு எடுக்க உரிமை உண்டு. அதன்படி ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனது தந்தை புகார் கொடுத்ததால் நான்கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்து உள்ளதாக தெரிகிறது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் காதல் ஜோடி ராஜ்குமார்- கல்லூரி மாணவி பிரியங்கா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு பிரியங்காவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். மகள் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். இந்த பிரச்சனையால் நல்லம்பள்ளியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. தற்போது அங்கு அமைதி திரும்பி வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை பிரியங்கா மற்றும் ராஜ்குமாரை போலீசார் தர்மபுரி இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவர் பிரியங்கா மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்தார். அந்த வாக்குமூலத்தில அவர் கூறி இருப்பதாவது:-
நானும் ராஜ்குமாரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நானாக விருப்பப்பட்டு ராஜ்குமாரை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டேன். அவர் என்னை கடத்தி செல்லவில்லை, அவரும், நானும் அரூரை அடுத்த புங்கனன்புதூரில் உள்ள ஒருவர் வீட்டில் தங்கி இருந்தோம். நான் மேஜர் என்பதால் எனக்கு சுயமாக முடிவு எடுக்க உரிமை உண்டு. அதன்படி ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனது தந்தை புகார் கொடுத்ததால் நான்கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்து உள்ளதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)