என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரணத்திலும் பிரியாத தம்பதி: கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பலி
Byமாலை மலர்9 Nov 2017 10:13 AM GMT (Updated: 9 Nov 2017 10:13 AM GMT)
அணைக்கட்டு அருகே கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் பெரியஊனை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே பெரியஊனை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது70). மண்பாண்ட தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (65).
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மல்லிகா சிகிச்சை பெற்று வந்தார்.
மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து சந்திரன் சரியாக சாப்பிடாமல் சோகத்துடன் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் திடீரென்று இறந்துவிட்டார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மல்லிகாவை அன்று மாலையில் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
அவர் கணவர் சந்திரன் உடல் அருகில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தார். இதனால் இரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையளித்தும் பலனின்றி சிறிதுநேரத்தில் மல்லிகா இறந்துவிட்டார்.
அதைத்தொடர்ந்து அவருடைய உடலும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு சந்திரனின் உடல் அருகில் வைக்கப்பட்டது. நேற்று மாலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டு சந்திரனின் உடல் புதைக்கப்பட்டது. மல்லிகாவின் உடல் எரிக்கப்பட்டது.
கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் பெரியஊனை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அணைக்கட்டு அருகே பெரியஊனை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது70). மண்பாண்ட தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (65).
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மல்லிகா சிகிச்சை பெற்று வந்தார்.
மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து சந்திரன் சரியாக சாப்பிடாமல் சோகத்துடன் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் திடீரென்று இறந்துவிட்டார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மல்லிகாவை அன்று மாலையில் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
அவர் கணவர் சந்திரன் உடல் அருகில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தார். இதனால் இரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையளித்தும் பலனின்றி சிறிதுநேரத்தில் மல்லிகா இறந்துவிட்டார்.
அதைத்தொடர்ந்து அவருடைய உடலும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு சந்திரனின் உடல் அருகில் வைக்கப்பட்டது. நேற்று மாலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டு சந்திரனின் உடல் புதைக்கப்பட்டது. மல்லிகாவின் உடல் எரிக்கப்பட்டது.
கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் பெரியஊனை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X