search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anaicut"

    அணைக்கட்டு அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    அணைக்கட்டு:

    அணைக்கட்டை அடுத்த ஊணை மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத்குமார் (வயது 22), கார்த்திகேயன் (23). இவர்கள் 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த பாலு என்பவரிடம் அரசு வேலையில் சேர்ப்பதற்கு யாராவது இருக்கின்றார்களா? என்று கேட்டுள்ளனர். அதற்கு பாலு, குடியாத்தம் தாலுகா மேலாலத்தூர் ஊராட்சி வடக்குபட்டறை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (33) என்பவர் இருக்கிறார் என்று சொல்லி அவரை வரவழைத்து வினோத்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரிடம் வேலை சம்பந்தமாக பேசியுள்ளனர்.

    அப்போது சுரேஷ் மின்வாரியத்துறையில் முக்கியமான அதிகாரிகள் தெரியும் முன்பணமாக 2 பேரும் சேர்ந்து ரூ.3 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் ரூ.3 லட்சத்தை சுரேசிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்று வரை வேலையும் கிடக்கவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.

    இதுகுறித்து வினோத்குமார் அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேசை கைது செய்தனர்.

    ×