என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அணைக்கட்டு அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 லட்சம் மோசடி - வாலிபர் கைது
அணைக்கட்டு:
அணைக்கட்டை அடுத்த ஊணை மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத்குமார் (வயது 22), கார்த்திகேயன் (23). இவர்கள் 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த பாலு என்பவரிடம் அரசு வேலையில் சேர்ப்பதற்கு யாராவது இருக்கின்றார்களா? என்று கேட்டுள்ளனர். அதற்கு பாலு, குடியாத்தம் தாலுகா மேலாலத்தூர் ஊராட்சி வடக்குபட்டறை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (33) என்பவர் இருக்கிறார் என்று சொல்லி அவரை வரவழைத்து வினோத்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரிடம் வேலை சம்பந்தமாக பேசியுள்ளனர்.
அப்போது சுரேஷ் மின்வாரியத்துறையில் முக்கியமான அதிகாரிகள் தெரியும் முன்பணமாக 2 பேரும் சேர்ந்து ரூ.3 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் ரூ.3 லட்சத்தை சுரேசிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்று வரை வேலையும் கிடக்கவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதுகுறித்து வினோத்குமார் அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேசை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்