என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஜினிகாந்த்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
Byமாலை மலர்19 Aug 2017 7:04 AM GMT (Updated: 19 Aug 2017 7:04 AM GMT)
போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் இளைய மகள் அம்ருதா.
இவருக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா மகன் இசக்கிதுரைக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. அம்ருதா- இசக்கிதுரை திருமணம் வருகிற செப்டம்பர் 3-ந்தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
அன்று காலையில் திருமணம் நடக்கிறது. மாலையில் இதே மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்களுக்கு திருநாவுக்கரசர் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.
இன்று காலை திருநாவுக்கரசர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்றார். அங்கு தனது மகளின் திருமண அழைப்பிதழை ரஜினியிடம் கொடுத்தார்.
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்து திருநாவுக்கரசர் விடை பெற்றார். அவரை வாசல் வரை வந்து ரஜினி வழி அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் இளைய மகள் அம்ருதா.
இவருக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா மகன் இசக்கிதுரைக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. அம்ருதா- இசக்கிதுரை திருமணம் வருகிற செப்டம்பர் 3-ந்தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
அன்று காலையில் திருமணம் நடக்கிறது. மாலையில் இதே மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்களுக்கு திருநாவுக்கரசர் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.
இன்று காலை திருநாவுக்கரசர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்றார். அங்கு தனது மகளின் திருமண அழைப்பிதழை ரஜினியிடம் கொடுத்தார்.
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்து திருநாவுக்கரசர் விடை பெற்றார். அவரை வாசல் வரை வந்து ரஜினி வழி அனுப்பி வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X