என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழிசை
சென்னை:
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கதக்கது. இதற்கு முன்பு இதேபோல் முடிவெடுத்து மறுபடியும் நீதிமன்றம் சென்று திறக்கப்பட்டது. இதேபோல் மீண்டும் நடைபெறக் கூடாது.
ஸ்டெர்லைட் ஆலை பணியாளர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போராட்டத்தில் சமூக விரோதிகள் இருக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது ஒரு கண்துடைப்பு என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
1996-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின்போது அபாயகரமான மூடப் படவேண்டிய ஸ்டெர்லைட் ஆலையை திறந்த பாவத்தை தி.மு.க. ஆட்சி தான் செய்தது. இதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆலையை திறந்ததற்கான காரணத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை திறந்ததில் காங்கிரசுக்கு என்ன பங்கு என்று திருநாவுக்கரசர் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.#SterliteProtest #BanSterlite
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்