என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.
    • பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நிஜாம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் யாகூப் பாஷா. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சமீனா. தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சமீனா தன்னுடைய கணவரிடம் கம்மல் வாங்கி தரும்படி நீண்ட நாட்களாக கேட்டு வந்தார். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சமீனா தனக்கு உடனடியாக கம்மல் வேண்டுமென கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.

    மேலும் கணவர் என்று கூட பார்க்காமல் அவரது உடலில் தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் ஷேக் யாகூப் பாஷா அலறினார் .அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உடல் முழுவதும் தீ பற்றியது. தீயை அணைத்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 45 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்

    இது குறித்து பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார் . ஷேக் யாகூப் பாஷாவும் மனைவி தன்னைக் கொல்ல முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் வேலைகளில் பா.ஜ.க.வினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
    • வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு.

    தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் இதுவரை 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க அறிவித்துள்ளது.

    இதில் 9 பேர் சந்திரசேகரராவின் பி.ஆர். எஸ். கட்சியில் இருந்து சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தவர்கள். வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியதால் தெலுங்கானா மாநில பா.ஜ.கவில் சலசலப்பு ஏற்பட்டது.


    கடந்த வாரம் ஐதராபாத் வந்திருந்த அமித்ஷாவிடம் இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இப்போதைக்கு அதிக இடங்களில் வெல்ல ஒன்றினைந்து வேலை செய்ய வேண்டும் என்று அவர் கண்டிப்பாக கூறியுள்ளார்.

    இதனால் தேர்தல் வேலைகளில் பா.ஜ.க.வினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    • பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
    • அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் பதுக்கி வைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடித்து உள்ளது. காங்கிரஸ் பி.ஆர்.எஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று நள்ளிரவு கரீம் நகர் உதவி போலீஸ் கமிஷனர் நரேந்தர் தலைமையிலான போலீசார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அங்குள்ள அறை ஒன்றில் 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ரூபாய் நோட்டுகள் எண்ணும் எந்திரம் மூலம் பணத்தை எண்ணினர்.

    அப்போது ரூ.6.65 கோடி இருந்தது தெரியவந்தது. மூட்டைகளில் கட்டப்பட்டு இருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து உதவி கமிஷனர் நரேந்தர் கூறுகையில்:-

    பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த பணத்தை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் பதுக்கி வைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    • காங்கிரஸ் தலைவர் ஒருவர் வீட்டுக்கு வெளியே அந்த கட்சியின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் தேதீப்யாராவ். இவர் சந்திரசேகர ராவ் கட்சி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் வீட்டுக்கு வெளியே அந்த கட்சியின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதனை தேதீப்யா மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றினார்.

    இதனால் அவரது ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது காரில் ஏறி தேதீப்யா ராவ் செல்ல முயன்றார். பெண்கள் சிலர் அவரை காருக்குள் புகுந்து தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஜூப்ளிகில்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ஜ.க. மூத்த தலைவர்களே பிரசாரத்தில் களம் இறங்கி வருகின்றனர்.
    • பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் ராஜ்பவனில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.

    இதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்களே பிரசாரத்தில் களம் இறங்கி வருகின்றனர்.

    தென் மாநிலங்களில் மோடி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இன்று ஒரே நாளில் கேரளா, தமிழகம், தெலுங்கானா மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார்.

    பிரதமர் மோடி கேரளா, நாகர்கோவில் பொதுகூட்டங்களுக்கு பிறகு தெலுங்கானா செல்கிறார். இன்று மாலை 4.30 மணி அளவில் சிறப்பு விமானம் மூலம் தெலுங்கானா பேகம் பேட் விமான நிலையத்திற்கு வருகிறார்.


    இதையடுத்து மாலை 5 மணிக்கு மல்காஜ் கிரி, செகந்திராபாத் மற்றும் ஐதராபாத் தொகுதிகளை உள்ளடக்கிய மிர்ஜல குடாவில் தொடங்கி மல்காஜ்கிரி சதுக்கம் வரை 1.3 கிலோ மீட்டர் தூரம் ஒரு மணி நேரம் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை பா.ஜ.க. தலைவர்கள் செய்துள்ளனர்.

    இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் ராஜ்பவனில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை காலை 11 மணிக்கு மகபூப் நகர், நாகர் கர்னூல், நல்கொண்டா தொகுதிகளை உள்ளடக்கிய நாகர் கர்னூலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் குல்பர்கா புறப்பட்டு செல்கிறார்.

    வரும் 18-ந் தேதி மீண்டும் தெலுங்கானா வரும் பிரதமர் மோடி கரீம் நகர், நிஜமாபாத், அடிலாபாத் தொகுதிகளை உள்ளடக்கிய ஜகிர் தாலாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். குறிப்பிடத்தக்கது.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் மார்கலா ரஜனியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் மற்றும் பினாமி என்று சந்தேகப்படும் நபர்களின் வீடுகளுக்குச் சொந்தமான 5 இடங்களில் சோதனை நடத்தினர்.
    • சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூபாய் 1.5 லட்சம் கண்டு பிடிக்கப்பட்டது.

    தெலுங்கானா:

    தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் ஜம்மிகுண்டா மண்டல் தாசில்தார் மற்றும் இணைப்பதிவாளர் மார்கலா ரஜனி. ஊழல் புகாரில் சிக்கியதற்காக இவர் மீது அந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மார்கலா ரஜனியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் மற்றும் பினாமி என்று சந்தேகப்படும் நபர்களின் வீடுகளுக்குச் சொந்தமான 5 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூபாய் 1.5 லட்சம் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் வங்கி கணக்கில் 25.70 லட்சம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    மேலும் 1462 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள், ரூ.9 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்கள், 31 லட்சம் மதிப்புள்ள கார் உள்ளிட்ட வாகனங்கள், 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 ஏக்கர் விவசாய நிலம், ரூ.21 லட்சம் மதிப்புள்ள 22 வீட்டு மனை ஆவணங்கள் சுமார் 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவை அனைத்தும் லஞ்சமாக வாங்கி குவித்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.
    • மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.

    மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் குறைந்தது 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். என்னுடைய சகோதரிகளுக்கு நான் ஒரு உறுதியை அளிக்க விரும்புகிறேன்.

    உங்கள் சகோதரனாகிய நானும் எனது அமைச்சர்கள் குழுவும் இந்த காங்கிரஸ் அரசும் உங்களை கோடீஸ்வரராக மாற்றுவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம். மாநிலத்தில் ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரியாக மாற்றுவேன். அதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்.

    தெலுங்கானா தங்க தெலுங்கானாவாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

    தற்போது தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரி ஆக்குவேன் என உறுதி அளித்துள்ளார்.

    பெண் வாக்காளர்களை குறிவைத்து காங்கிரஸ் இது போன்ற வாக்குறுதிகளை அளித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    • முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது கழுகுகள் பறக்க விடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
    • 2 ஆண்டுகளுக்கு மேலாக கழுகுகள் டிரோன்களை கையாள முழு பயிற்சி பெற்றுள்ளன.

    தெலுங்கானா:

    தெலுங்கானா மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் கழுகு ஈடுபடுத்தப்படுகின்றன. முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது கழுகுகள் பறக்க விடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு முதல் 3 கழுகுகளுக்கு போலீசார் மொய்னாபாத்தில் உள்ள மையத்தில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

    இந்த கழுகுகள் ஆளில்லா விமானங்களை துல்லியமாக கணித்து அவற்றை கீழே இழுத்து வரும் தன்மை கொண்டது.

    இதற்காக கழுகுகளுக்கு தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    2 ஆண்டுகளுக்கு மேலாக கழுகுகள் டிரோன்களை கையாள முழு பயிற்சி பெற்றுள்ளன. நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்த கழுகு படையை பயன்படுத்த முடியும். நெதர்லாந்தில் கழுகு படை உள்ளது. அதற்குப் பிறகு இந்தியாவிலேயே தெலுங்கானாவில் தான் போலீசார் கழுகுப்படையை உருவாக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதாக தெரிவித்தனர்.

    • பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.
    • கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பெருநகர பகுதியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அங்கு குறைந்துள்ளது. இதனால் குடியிருப்புகளுக்கு குடிநீர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் கிடைக்க பொதுமக்கள் சுமார் 5 நாட்கள் வரை காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. 5 ஆயிரம் லிட்டர் டேங்கர் குடிநீர் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது

    இதனால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.

    இதே நிலை நீடித்தால் கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்குள்ள பெரும் பணக்காரர்கள் கூட உடற்பயிற்சி மையம், பெரிய வணிக வளாகங்களில் உள்ள கழிவறைகளிலும் குளித்து வருகின்றனர்.

    அதே நிலை விரைவில் ஐதராபாத்தில் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • கடந்த 2020-ம் ஆண்டு திப்பு சுல்தான், பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்கள் பலரின் பாடப்பகுதியையும் பா.ஜ.க. அரசு நீக்கியது.
    • மாணவர்கள் சிறு வயதிலேயே சமூக சிந்தனைகள் கொண்டு வளர்வார்கள்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில்கொ ரோனா தொற்று காலத்தில், மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி கடந்த 2020-ம் ஆண்டு திப்பு சுல்தான், பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்கள் பலரின் பாடப்பகுதியையும் பா.ஜ.க. அரசு நீக்கியது. இந்த பாட பகுதிகளை நீக்கியது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் நீக்கப்பட்ட பாடப் பகுதிகளை மீண்டும் சேர்ப்பது குறித்து தற்போதைய காங்கிரஸ் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்சபை தேர்தலின் போது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.க. அரசாங்கத்தின் போது பாட புத்தகங்களில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் மாற்றியமைக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதியளித்திருந்தது.

    தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழுவை அமைத்தது. இக்குழு கர்நாடக அரசின் 6 முதல் 10 ம் வகுப்புகளுக்கான கன்னடம் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரையை வெளியிட்டுள்ளது.

    இந்தக் குழு அளித்த பரிந்துரையின்படி, 10-ம் வகுப்பு வரலாறு பாடநூலில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சமூக சீர்த்திருத்தங்கள் பாடம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

    பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்த்திருப்பது மாணவர்களை சிறு வயதிலேயே சமூக சிந்தனைகள் கொண்டு வளர்வார்கள் என கர்நாடகா கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வேட்பாளர்களின் பின்னணி மற்றும் உளவு த்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது.
    • காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

    தெலுங்கானாவில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

    கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணு கோபால், அம்பிகா சோனி தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபதாஸ் முன்சி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    கூட்டத்தில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கு ஏற்கனவே தயார் செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்க உள்ளனர்.

    வேட்பாளர்களின் பின்னணி மற்றும் உளவு த்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது.

    தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத், செவெல்லா, மஹபூபாபாத் நகர், நாகர் கர்னூல், கரீம் நகர், நிஜாமாபாத் ஆகிய இடங்களுக்கு வேட்பாளர்கள் தேர்வில் ஏற்கனவே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    மீதமுள்ள தொகுதிகளுக்கு பல்வேறு நிபந்தனைகனின் அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மாநிலத்தில் 14 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கூறினார்.

    • ராகுல் காந்தி எனது தலைவர், பிரதமருக்கு பதிலாக அவரையும் சோனியா காந்தியையும் தான் புகழ்வேன்.
    • ஒரு சிலர் தங்களது மகனை முதல் மந்திரியாக்க பிரதமர் மோடியின் ஆதரவை கேட்டனர்.

    தெலுங்கானா மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இதில் பங்கேற்ற தெலுங்கானா காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை மூத்த சகோதரர் என குறிப்பிட்டார் .

    இதற்கு தெலுங்கானா மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் பிரதமர் மோடியை அவர் வெறித்தனமாக புகழ்ந்ததாக கூறினர். இதற்கு ரேவந்த் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

    நான் தெலுங்கானா மாநில வளர்ச்சிக்காக நேரடியாக பிரதமர் மோடியிடம் நிதி கேட்டேன். ஒரு சிலர் தங்களது மகனை முதல் மந்திரியாக்க பிரதமர் மோடியின் ஆதரவை கேட்டனர். அது போன்ற தலைவர்கள் போல் இல்லாமல் நான் பொதுக்கூட்டத்தில் அவரை வெளிப்படையாக சந்தித்தேன்.

    நான் வைத்த கோரிக்கைகள் வெளிப்படையாகவும் மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் உள்ளது. என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக அல்ல.

    நான் மோடியை வெறித்தனமாக புகழ்ந்ததாக கூறப்படுவதை நிராகரிக்கிறேன். குஜராத் மாநிலத்திற்கு வழங்குவது போல தெலுங்கானாவிற்கும் நிதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

    தெலுங்கானா வளர்ச்சிக்கு நிதி கேட்பதில் யாருக்காவது சிக்கல் இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். நான் மோடியை கவர முயற்சி செய்யவில்லை.

    ராகுல் காந்தி எனது தலைவர், பிரதமருக்கு பதிலாக அவரையும் சோனியா காந்தியையும் தான் புகழ்வேன். என்னுடைய வார்த்தைகள் மற்றும் கோரிக்கைகள் நாட்டின் கூட்டாட்சி அதிகாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×