என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஐதராபாத்தில் பிரதமர் மோடி 'ரோடு ஷோ'
- பா.ஜ.க. மூத்த தலைவர்களே பிரசாரத்தில் களம் இறங்கி வருகின்றனர்.
- பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் ராஜ்பவனில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.
பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.
இதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்களே பிரசாரத்தில் களம் இறங்கி வருகின்றனர்.
தென் மாநிலங்களில் மோடி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இன்று ஒரே நாளில் கேரளா, தமிழகம், தெலுங்கானா மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார்.
பிரதமர் மோடி கேரளா, நாகர்கோவில் பொதுகூட்டங்களுக்கு பிறகு தெலுங்கானா செல்கிறார். இன்று மாலை 4.30 மணி அளவில் சிறப்பு விமானம் மூலம் தெலுங்கானா பேகம் பேட் விமான நிலையத்திற்கு வருகிறார்.
இதையடுத்து மாலை 5 மணிக்கு மல்காஜ் கிரி, செகந்திராபாத் மற்றும் ஐதராபாத் தொகுதிகளை உள்ளடக்கிய மிர்ஜல குடாவில் தொடங்கி மல்காஜ்கிரி சதுக்கம் வரை 1.3 கிலோ மீட்டர் தூரம் ஒரு மணி நேரம் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை பா.ஜ.க. தலைவர்கள் செய்துள்ளனர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் ராஜ்பவனில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை காலை 11 மணிக்கு மகபூப் நகர், நாகர் கர்னூல், நல்கொண்டா தொகுதிகளை உள்ளடக்கிய நாகர் கர்னூலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் குல்பர்கா புறப்பட்டு செல்கிறார்.
வரும் 18-ந் தேதி மீண்டும் தெலுங்கானா வரும் பிரதமர் மோடி கரீம் நகர், நிஜமாபாத், அடிலாபாத் தொகுதிகளை உள்ளடக்கிய ஜகிர் தாலாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்