search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூருவை தொடர்ந்து ஐதராபாத்தில் தண்ணீர் தட்டுப்பாடு
    X

    பெங்களூருவை தொடர்ந்து ஐதராபாத்தில் தண்ணீர் தட்டுப்பாடு

    • பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.
    • கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பெருநகர பகுதியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அங்கு குறைந்துள்ளது. இதனால் குடியிருப்புகளுக்கு குடிநீர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் கிடைக்க பொதுமக்கள் சுமார் 5 நாட்கள் வரை காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. 5 ஆயிரம் லிட்டர் டேங்கர் குடிநீர் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது

    இதனால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.

    இதே நிலை நீடித்தால் கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்குள்ள பெரும் பணக்காரர்கள் கூட உடற்பயிற்சி மையம், பெரிய வணிக வளாகங்களில் உள்ள கழிவறைகளிலும் குளித்து வருகின்றனர்.

    அதே நிலை விரைவில் ஐதராபாத்தில் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×