என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கைதானவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
- போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணி ஒருவர், பெருமளவு போதைப்பொருள் கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருந்தது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் சாதாரண உடையில் வந்திருந்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்து கொண்டு இருந்தனர்.
அப்போது 35 வயது வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் கம்போடியா நாட்டுக்கு சென்றுவிட்டு, சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதையடுத்து அந்த வாலிபரை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். அவரது உடைமைகளையும் பரிசோதித்தனர். அதில் 3.5 கிலோ கொகைன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி என கூறப்படுகிறது.
போதைப்பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், அதனை கடத்தி வந்த வாலிபரை கைது செய்து தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
கைதான அவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் கடத்தி வந்த போதைப்பொருளை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள 2 போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்ததும் தெரிந்தது.
இதுபற்றி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இந்த சம்பவத்தில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
- கரூர் சம்பவம் குறித்து மனவேதனையுடன் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டது.
செப்டம்பர் 27 அன்று (சனிக்கிழமை) கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. முழுமையான உண்மை, அதிகாரப்பூர்வ விசாரணைக்குப் பின்னரே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டததின் விற்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, தமிழக வெற்றிக் கழகம் கிளைச் செயலாளர் அய்யப்பன் (வயது 52) என்பவர் இன்று, திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கு முன் அவர் கரூர் சம்பவம் குறித்து மனவேதனையுடன் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் சம்பவ இடத்தில் இருந்து போலீசார் மீட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், "கரூர் மாவட்டத்தில் விஜய் வருகையில் போதிய பாதுகாப்பு இல்லை. நூதன முறையில் நெருக்கடி கொடுத்த செந்தில் பாலாஜி மூலமாக இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது.
கரூர் நிகழ்வால் ஏற்பட்ட ஆதங்கமே அவரது இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி, கடிதத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.
- மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில் கைது.
கரூரில் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.
காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரபடுத்தினார்.
இந்த நிலையில் டிஎஸ்பி மாற்றம் செய்யப்பட்டு கரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று சம்பவ இடமான வேலுச்சாமி புரத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்.
இதற்கிடையே, கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில், கரூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- மக்கள் துயரத்தில் இருக்கும்போது உங்கள் போட்டோஷூட்டால் மேலும் துன்புறுத்தாதீர்கள்.
- மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி!
நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.
அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே...
என்ன அவதூறு பரவியது?
-உங்கள் கட்சிக் காரர்கள், "தமிழ்நாடு மாணவர் சங்கம்" என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே- அந்த அவதூறா?
-உங்கள் அரசின் காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது- இவை எல்லாம் வதந்தியா?
பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன?
உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே- அதுவா?
அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு Vacation பறந்து சென்றுவிட்டாரே- அதுவா?
கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா?
சென்னை ஏர் ஷோ-வை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டுகளித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே- அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலன் அவர்களே?
எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது!
இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் Eyewash ஆணையம் என்பதைக் காட்டுகிறது.
மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே- மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்!
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று காலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்தது.
- மாலை 560 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,700-க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வழக்கமாக காலையில் ஒருமுறை தங்கம் விலையில் மாற்றம் இருக்கும். ஆனால் இன்று மாலையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
காலையில் ஒரு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் 70 ரூபாய் உயர்ந்தது. இன்று ஒரேநாளில் கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு 1040 ரூபாய் உயர்ந்து 86,160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 10770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுறது.
முன்னதாக,
தங்கம் விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத உச்சத்தை பதிவு செய்து இருந்தது. அதன் பின்னர் சற்று விலை குறைய தொடங்கியது. இதனால் தங்கம் விலை ரூ.84 ஆயிரத்துக்கு சரிந்தது.
ஆனால், மீண்டும் கடந்த 26-ந்தேதி முதல் தங்கம் விலை எகிறத் தொடங்கியுள்ளது. ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை.
- கரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமனம்.
கரூரில் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.
காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரபடுத்தினார்.
இந்த நிலையில் டிஎஸ்பி மாற்றம் செய்யப்பட்டு கரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று சம்பவ இடமான வேலுச்சாமி புரத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்.
இந்நிலையில், கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர்
பலியான வழக்கில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- த.வெ.க. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் சோக சம்பவத்துக்கு காரணம்.
- த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி வலை பின்னப்படுகிறது.
கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வலியறுத்தி த.வெ.க. வக்கீல் பிரிவினர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வந்தனர்.
அப்போது த.வெ.க. வக்கீல் அறிவழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது காவல்துறை கடமையாற்ற தவறி உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.
விஜய் பிரசாரத்தின்போது கூடி இருந்தவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலில் இறந்தது தொடர்பாக தடயங்களை அழிக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
த.வெ.க. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் சோக சம்பவத்துக்கு காரணம். கூட்டத்தில் விஜய் பேசியபோது மர்ம நபர்கள் செருப்பு வீசினார்கள். இந்த சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி வலை பின்னப்படுகிறது. உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம்.
த.வெ.க. கூட்டத்தில் குண்டர்கள் பலர் கல்வீச்சிலும், செருப்புகளையும் வீசி தொண்டர்களை தாக்கியுள்ளனர். சதி திட்டம் தீட்டி இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர் இதற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனையில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது முன்கூட்டியே ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்திருந்ததும் சதி திட்டத்திற்கான ஆதாரங்களாக அமைந்துள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் போதுமான காவலர்களை பணியமர்த்தாததும் முன்னேற்பாடுகளை செய்யாததும் இந்த சம்பவத்துக்கு காரணமாகும்.
எனவே இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிப்படும். இது தொடர்பாக கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.
தொடர்ந்து எங்கள் தரப்பு நியாயங்களை தெரிவித்து வாதாடி மேற்கண்ட குற்றத்துக்கு காரணமானவர்களை வெளிக் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம்.
- தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் தரலாம். அமைச்சருக்கு ஆஸ்கர் வழங்க பரிந்துரைப்பேன் என கூறியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மரியாதைக்குரிய அண்ணன் ராமதாஸ் அவர்கள், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்!
எங்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல "எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!". தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம்.
வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன் என கூறினார்.
- பொதுவாக விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிகம் வருவார்கள்.
- ஆனால் சமீப காலமாக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் ஆண்டாக மாணவர் சேர்க்கை 100 சதவீதம் அடைந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என அனைத்து தரப்பு மக்களும் போற்றி புகழும் வேளையில் அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களால் மாணவர்கள் எவ்வாறு பயனடைந்து வருகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் கூமாபட்டி ரீல்ஸ் ஸ்டைலில் பெற்றோர்களுக்கு வித்தியாசமான அழைப்பு விடுத்துள்ளனர்.
அதில் ஏ.....ங்க..... இங்க பாருங்க..... அரசு பள்ளிங்க நம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களால் நாங்கள் பயனடைந்து வருகிறோம். தினந்தோறும் தரமான காலை உணவு வழங்கப்படுகிறது பாருங்க....
எங்க பள்ளியில் எவ்வளவு பெரிய டி.வி. இருக்கு பாருங்க.....
எங்க பள்ளியில் கழிப்பறை வசதி எப்படி இருக்கு பாருங்க.....
எங்க பள்ளியில் வகுப்பறை எல்லாம் வேற லெவலில் இருக்கு பாருங்க....
என பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்களை மாணவ-மாணவிகள் தங்கள் மழலை கலந்த மொழியில் நகைச்சுவை உணர்வுடன் கைகளை காட்டி வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிகம் வருவார்கள். ஆனால் சமீப காலமாக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கிராமபுரத்தில் உள்ள பெற்றோர்களை ஈர்க்கும் வகையில் தலைமை ஆசிரியர் மேற்கொண்டுள்ள இந்த விழிப்புணர்வு பிரசாரம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
- மாநில அரசை கண்காணிக்க நான் இங்கு வரவில்லை என்றார் நிர்மலா சீதாராமன்.
- சமூக வலைதளத்தில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரில் பெரும்பான்மையானோர் ஏழைக் குடும்பங்கள். வீட்டுக்கு வாழ்வாதாரமாக இருந்தவர்களே இறந்து போயிருக்கிறார்கள். கேட்கவே துக்கமாக இருந்தது.
என்ன ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை.
நேரடியாக வரும் சூழல் பிரதமருக்கு இல்லாத நிலையில் என்னை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்குமாறு கூறினார்.
சமூக வலைதளத்தில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
பாதிக்கப்பட்டோரை சென்று சந்திக்கும் நிகழ்வு தானே தவரி, இதில் வேறு எதுவுமே இல்லை.
பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், சிகிச்சை பெறுவோருக்கு ரூ.50 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவி பாதிக்கப்பட்டோரை சென்றடைவதை நான் கண்காணிப்பேன். பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குக்கே பிரதமரின் நிவாரண நிதியை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் பலி சம்பவம் இனி நமது நாட்டில் எங்கும் நிகழக் கூடாது. தவெக எதிர்பார்த்ததை விட மித மிஞ்சிய அளவுக்கு கூட்டம் கூடியதாக மக்கள் கூறினார்கள்.
பாதிக்கப்பட்டோர் கூறியதை பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரிடம் சென்று கூறுவேன். மாநில அரசு சொல்கிறது,. என்ன செய்கிறது என்பதை கண்காணிக்க நான் வரவில்லை, பிரதமர் அறிவுறுத்தலில் வந்துள்ளேன்.
இந்த மாதிரியான சம்பவம் நிகழும்போது பலவிதமான கருத்துகள் வருவதும், கோபம் எழுவதும் இயல்புதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு கேள்விகளை உடன் இருந்த காவல்துறை மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட குழுவாக உள்ள அரசு அதிகாரிகளிடம் எழுப்பினார்.
- கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கரூர்:
கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் இன்று கரூருக்கு வருகை தந்தனர். அவர்களுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வந்தார். அவர்கள் விஜய் பிரசாரம் நடந்த வேலுசாமிபுரத்தில் தனது ஆய்வை தொடங்கினர்.
அப்போது, பிரசாரத்திற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன? இந்த நிகழ்வு எப்படி நடந்தது? சம்பவத்தின் போது எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்? எந்தெந்த வழியாக மக்கள் பிரசார இடத்திற்கு வந்தார் கள்..? எப்படி வெளியே சென்றார்கள்? எவ்வளவு பேர் இங்கு இருந்தார்கள்?
கூட்ட நெரிசல் ஏற்பட்ட நேரம் எப்போது? கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்னவெல்லாம் இருந்தது போன்ற பல்வேறு கேள்விகளை உடன் இருந்த காவல்துறை மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட குழுவாக உள்ள அரசு அதிகாரிகளிடம் எழுப்பினார்.
அதற்கு காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, போலீசார் தெப்போது பேரிகாடு அமைத்து சீல் வைத்து பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கும் பிரசாரம் நடைபெற்ற 4-வது தெரு மற்றும் அதன் எதிர் சந்து ஆகியவற்றை மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.
பின்னர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
நெரிசலில் பலியான 41 பேரும் என்ன மாதிரியான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்கள், அவர்கள் உயிரிழந்தற்கான காரணங்கள் என்னவாக உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை என்ன என்பது குறித்தெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.
- ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- சுற்றுப்பயணத் திட்டம் அக்.2, 3, மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத் திட்டத்தில், 29, 30, மற்றும் 4-ந்தேதிகளில் தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, முறையே அக்.2, 3, மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
வரும் 2-ந்தேதி தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி தருமபுரி அரூர்,
3-ந்தேதி தருமபுரி, பாலக்கோடு பென்னாகரம்,
6 -ந்தேதி நாமக்கல், நாமக்கல் பரமத்தி வேலூர்.
ஏற்கெனவே 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் நடைபெறுவதாக அறிவித்திருந்த பிரசாரக் கூட்டம், அதே தேதியில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






