என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஊராட்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
    • அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர் சங்கம் தெரிவிக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்ற நிலையில், ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது.

    இந்த ஊராட்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், ஆயிரக்கணக்கான ஊராட்சிகளில் செயலாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்ற ஓர் அவல நிலை நீடிக்கிறது.

    ஒரு செயலாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கவனிக்கும் நிலை உள்ளதால், ஊராட்சிகளின் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர் சங்கம் தெரிவிக்கிறது. ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
    • செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

    படப்பை:

    குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் பூந்தண்டலம் மணிமங்கலம் ஒரத்தூர் நாட்டரசன்பட்டு வடக்குப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம் பள்ளி வகுப்பறை, கட்டிடம் நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

    • துர்நாற்றம் வீசும் தண்ணீரால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
    • கழிவு தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் சி.எம்.எஸ் நகரில் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர் வரத்து கால்வாய் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே மழைநீர் தேங்கி நின்றது.

    இதனால் இந்த நீர் வரத்து கால்வாயை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகலப்படுத்தி தண்ணீரை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தினர்.

    இந்த நிலையில் தற்போது இந்த கால்வாயில் கழிவு நீர் கலந்து உள்ளதால் தண்ணீர் பச்சை நிறமாக மாறி காட்சி அளிக்கிறது. தண்ணீரின் மேல் பகுதி முழுவதும் பாசிப்படர்ந்து துர்நாற்றம் வீசுவதோடு கொசு மற்றும் புழு பூச்சிகள் அதிக அளவில் உற்பத்தி ஆகி வருகின்றன.

    தண்ணீர் வெளியேற வழியில்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்த திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அதனை ஒட்டி உள்ள தாலுகா காவல் நிலையம், காவலர் குடியிருப்பு, தனியார் கடைகள், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள், மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் வழியாக வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அருகில் குடியிருக்கும் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    துர்நாற்றம் வீசும் தண்ணீரால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • விசாரித்த நீதிபதி வனத்துறை இடத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது மேல்பாக்கம் கிராமம். இங்கு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள், கோவில்கள் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் சுமார் ஐந்து தலைமுறையாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைத்து குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை, மின் இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டு வீட்டு வரியும் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி வனத்துறை இடத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் முதல் கட்டமாக 40 வீடுகளை அகற்ற கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரவணக்குமாரி தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார், மின்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் ஜே.சி.பி.எந்திரத்துடன் வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, தற்போது வசித்து வரும் நிலத்தினை குடியிருப்பவர்களுக்கே சொந்தமாக்கிட வேண்டும் அல்லது தங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    • தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை வளப்படுத்த 10 மண்டல திட்டங்கள் தயாரிக்கப்படுகிறது.
    • நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் கிரெடாய் ஃபேர்ப்ரோ 2025 (CREDAI Fairpro 2025) என்ற வீடு விற்பனை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வீடுகள் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் சூப்பர் சென்னை முன்னெடுப்பை அறிமுகம் செய்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று தெரிய வைப்பது கட்டிடங்கள் தான்.

    * மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் தேவைகள் அனைத்தையும் அரசே செய்துவிட முடியாது.

    * ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ததற்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

    * தமிழகம் மிகவும் நகர்மயமாக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.

    * வீடுகளின் தேவை அதிகரித்து வருவதை கணக்கிட்டு புதிய திட்டங்களை தீட்ட வேண்டும்.

    * தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை வளப்படுத்த 10 மண்டல திட்டங்கள் தயாரிக்கப்படுகிறது.

    * கோவை, மதுரைக்கான திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்படும்.

    * சென்னையின் நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

    * கட்டடங்களுக்கான ஒப்புதல் வழங்கும் கால அளவு குறைந்துள்ளது.

    * தமிழகத்தில் அனைவரின் சொந்த வீடு கனவை நனவாக்க சுயசான்றிதழ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    * சுயசான்றிதழ் திட்டத்தின்கீழ் 51 பேர் கட்டட அனுமதி பெற்றுள்ளனர்.

    * தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 48 சதவீத மக்கள் நகரங்களில் வசித்து வருகின்றனர்.

    * செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் நவீன பேருந்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்படும்.

    * புத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும்.

    * சென்னை நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளின் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை

    * நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும்.

    * அனைத்து தரப்பு மக்களின் சொந்த வீடு கனவு திட்டத்தை நிறைவேற்ற திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

    • ஒரு நாடோ, ஒரு மாநிலமோ வளர வேண்டும் என்றால் அதன் அங்கமாக இருக்கும் அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும்.
    • சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசின் துரோகத்தை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் சமூகநீதியை வலுப்படுத்துவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நான் வலுவடைந்து வரும் நிலையில், அதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்வதாக தெரியவில்லை. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் விஷயத்தில் அக்கறையின்றி, சமூகநீதிக்கு எதிராக தி.மு.க. அரசு செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

    ஒரு நாடோ, ஒரு மாநிலமோ வளர வேண்டும் என்றால் அதன் அங்கமாக இருக்கும் அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும். ஒரு சமுதாயம் பின்தங்கி இருந்தால் கூட ஒட்டுமொத்த மாநிலத்தின் அல்லது நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் அனைவருக்கும் சமமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஒவ்வொரு சமூகமும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பில் எந்த நிலையில் உள்ளன என்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் திட்டம் வகுக்க வேண்டியது அவசியம் ஆகும். அத்தகைய திட்டத்தை வகுப்பதற்கு தேவையான தரவுகளை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலமாக மட்டும் தான் திரட்ட முடியும். அதனால் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ம.க. நிறுவனர் வலியுறுத்தி வருகிறார்.

    அதேபோல், சமூகநீதியையும், சம நீதியையும் நிலை நிறுத்துவதற்கும் சமூகநீதியை பாதுகாப்பதற்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகும். குறிப்பாக, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கு தமிழ்பாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியே தீர வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தி.மு.க. அரசு மறுக்கிறது.

    அண்டை மாநிலமான தெலுங்கானா சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்தது மட்டுமின்றி அதனடிப்படையில் அம்மாநிலத்தின் இட ஒதுக்கீட்டின் அளவை இப்போதுள்ள 50 விழுக்காட்டில் இருந்து 66 விழுக்காடாக உயர்த்த முடிவு செய்து அதற்கான சட்டத்திருத்த முன்வரைவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. ஆனால், இதை எதையுமே உணராத தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடிக் கொண்டிருக்கிறது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசின் துரோகத்தை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த விவகாரத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக கடந்த பத்தாம் தேதி சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், "சமூகநீதியைக் காப்பதற்கான கடமையை தமிழக அரசு செய்யத் தவறிய நிலையில், அதை சுட்டிக்காட்டி கடமையை செய்ய வைக்க வேண்டியது சமூகநீதி அமைப்புகளின் பொறுப்பு ஆகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி, சமூக நீதியில் அக்கறைக் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் சார்பில் சென்னை மாநகரில் மாபெரும் போராட்டத்தை நடத்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக் கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    அதனடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சமூகநீதி கூட்டமைப்புக் கட்சிகள் இணைந்து வரும் 20-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்தவிருக்கின்றன.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான எனது தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் எ.கே.மூர்த்தி, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.பாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் இரவி பச்சமுத்து, புதிய நீதிக் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் கோ.சமரசம், தென்னிந்திய பார்வர்டு தலைவர் திருமாறன்ஜி, கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கவுண்டர். தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ் செல்வக்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக இணைப் பொதுச்செயலாளர் தமிழாசன், தமிழ்நாடு யாதவ மகாசபை செயலாளர் வழக்கறிஞர் சேது மாநவன், வெள்ளாளர் முன்னேற்றக்கழகத் தலைவர் அண்ணா சாவணம், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து இரமோஷ் வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தவிர சமூகநீதியில் அக்கறை கொண்ட மேலும் பல அமைப்புகளின் நிர்வாகிகளும் இத்தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்வர் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பூஞ்சேரி தனியார் விடுதியில் விரைவில் நடைபெற இருக்கிறது.
    • பாதுகாப்பு வசதிகளுடன் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2-ந்தேதியுடன் முதல் ஆண்டு முடிவடைந்து 2-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.

    இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி தனியார் விடுதியில் விரைவில் நடைபெற இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் இடம், வாகன நிறுத்தும் இடங்கள், பங்கேற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட அரங்குகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் வந்து செல்லும் வண்ணம் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • சரக்கு ரெயில் வண்டி கார்த்திக் செல்வம் மீது மோதியதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் பள்ளிக் கூடத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் செல்வம் (வயது 26). தையல் வேலை செய்து கொண்டு ஆடுகள் வளர்த்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 4 மணிக்கு வாடிப்பட்டி-சோழவந்தான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் கீழ்நாச்சிகுளம் பகுதியில் ரெயில்வே தண்டவாள பகுதிக்கு கார்த்திக் செல்வம் சென்றுள்ளார். அப்போது கூடல் நகரில் இருந்து திண்டுக்கல் சென்ற சரக்கு ரெயில் வண்டி கார்த்திக் செல்வம் மீது மோதியதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த மதுரை ரெயில்வே சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் செல்வம் ரெயில் மோதி விபத்தில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரூ.2.70 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை.
    • அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி.

    பழனி:

    பழனியில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா கடந்த 5-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி, வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தந்த சப்பரம், தோலுக்கிணியாள் போன்ற வாகனங்களில் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கடந்த திங்கள்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டமும், செவ்வாய்கிழமை மாலை தைப்பூச தேரோட்டமும் நடைபெற்றது. தேரோட்டம் நிறைவடைந்த நிலையிலும் பழனி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் நகரத்தார் காவடி குழுவினர் பழனி மலைக்கோவிலுக்கு சென்று தங்கள் காவடிகளை செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    நேற்று இரவு 9ம் நாள் நிகழ்ச்சியாக துறையூர் மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாராசாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.

    10ம் நாள் நிகழ்ச்சியாக இன்று தெப்ப தேேராட்டத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் உள்ள தெப்பத்தில் இன்று இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

    அதன் பின்பு இரவு கொடியிறக்கம் நடத்தப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 3 நாட்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்தனர். தேவஸ்தானம் சார்பில் விற்பனை செய்யப்பட்ட அபிஷேக பஞ்சாமிர்தத்தை அதிக அளவில் பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.

    3 நாட்களில் மட்டும் 4 லட்சத்தி 26 ஆயிராயிரத்தி 858 பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனையாகி உள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடியே 70 லட்சத்தி 13 ஆயிரத்தி 890 வருவாய் கிடைத்துள்ளது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி நகரில் இலவச பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு சிறப்பு பஸ்களும், பழனியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விழாக்கால பஸ்களும் இயக்கப்பட்டன. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.40 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது. 

    • அ.தி.மு.க.விற்கு தற்போதைய நிலையில் 2 ராஜ்யசபா சீட் கிடைக்கும். பா.ம.க தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
    • கூட்டணியில் இருந்த போது அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கியது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க.விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டதாக தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் 6 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசியல் கட்சியினர் இடையே ராஜ்யசபா இடம் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    அ.தி.மு.க.விற்கு தற்போதைய நிலையில் 2 ராஜ்யசபா சீட் கிடைக்கும். பா.ம.க தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைய உள்ளது. கூட்டணியில் இருந்த போது அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கியது. அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைவதால் அந்த இடத்தை பெற தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    முன்னதாக, நேற்று முன்தினம் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபோதே தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் என கையெழுத்தானது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தே.மு.தி.க.வின் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்படும். அ.தி.மு.க. உடனான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது என்றார்.

    இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் இதுவரை தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் குறித்து வாக்குறுதி அளிக்கவில்லை. சீட் குறித்து அப்போது பார்த்துக்கொள்ளலாம் என அ.தி.மு.க. கூறியதாகவே தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த ஆண்டு மார்ச் 20-ந்தேதி அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் 5 எம்.பி. தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் ராஜ்யசபா சீட் பற்றி குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.



    தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. சார்பில் இதுவரை குறிப்பிடப்படவில்லை. தே.மு.தி.க.வினர் மட்டுமே தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என பேசி வருவதாக அ.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது.

    கூட்டணி அமைந்தபோதே ராஜ்யசபா சீட் என ஒப்பந்தத்தில் கையெழுத்தானதாகவும் பாராளுமன்ற தேர்தலின்போதே ராஜ்யசபா சீட் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் ஏற்கனவே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், ராஜ்யசபா சீட் விவகாரத்தால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஜான் கில்பர்ட்டை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
    • மாமியார்-மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    கடையநல்லூர்:

    தென்காசி அருகே உள்ள இலத்தூர் இனா விலக்கு பகுதியில் கடந்த 11-ந்தேதி ஒரு இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கமலி (வயது 30) என்பதும், அவரை அவரது கணவர் ஜான்கில்பர்ட் (33) குடும்ப பிரச்சனையில் கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ஜான் கில்பர்ட்டை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஜான் கில்பர்ட்டும், டெய்லரான கமலியும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஜான் கில்பர்ட் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் மாமியார்-மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரச்சனையை தவிர்க்கும் விதமாக ஜான் கில்பர்ட் தனது மனைவியுடன் தனியாக வீடு பார்த்து தனி குடித்தனம் சென்றார்.

    அங்கிருந்து தனியார் நிறுவனத்திற்கு கமலி வேலைக்கு சென்று வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கமலியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கமலி கர்ப்பம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வேலைக்கு செல்வதை நிறுத்தச் சொல்லிவிட்டார். அதையும் மீறி கமலி வேலைக்கு சென்றுள்ளார்.

    இதனால் ஜான் கில்பர்ட் தனிக்குடித்தனத்தை காலி செய்து விட்டு தன்னுடைய மனைவி மற்றும் தாயுடன் மீண்டும் சொந்த வீட்டிலேயே வசித்து வந்தார். அதன் பின்னர் மாமியாருடன் சேர்ந்து வசிப்பது பிடிக்காததால் தொடர்ந்து மாமியார்-மருமகள் இருவருக்கும் மத்தியில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று மாமியார்-மருமகள் இடையே சமையல் அறையில் வைத்து பிரச்சனை ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் மாமியார் வெளியே சென்று விட்டார். உடனே சமையலறைக்குள் சென்று ஜான் கில்பர்ட் தனது மனைவி கமலியுடன் வாக்குவாதம் செய்தார்.

    ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அடித்து மனைவியை கொலை செய்துள்ளார். அதன்பின்னர் கமலியின் உடலை தன்னுடைய சகோதரர் தங்க திருப்பதி என்பவரின் உதவியுடன் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதிக்கு காரில் கொண்டு சென்றுள்ளார். அங்கு வைத்து அவரது உடலை தீவைத்து எரித்து விட்டு 2 பேரும் தப்பிச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ஜான் கில்பர்ட்டையும், அவரது சகோதரர் தங்க திருப்பதி யையும் கைது செய்த போலீசார், ஜான் கில்பர்ட் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்டில், பீரோ என ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள், 4 கிராம் தங்க தாலி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
    • நல்ல காதலர்களாக, நண்பர்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்களுக்கு கட்டில், பீரோ என ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள், 4 கிராம் தங்க தாலி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பின்போது அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

    * காதலர் தினம் என்று சொன்னால் சிலருக்கு கோபம் வரும். காதலர் தினத்தை கொண்டாடக்கூடாது என கூறுவார்கள்.

    * காதலை கொண்டாடாமல் இருக்க முடியுமா? ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான்.

    * நல்ல காதலர்களாக, நண்பர்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என புதுமண தம்பதிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

    ×