search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panchayat secretary"

    • ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் தாலுகா வலையபட்டியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 43). இவருக்கு செந்தில் என்ற மனைவி யும் ஒரு மகன், மகளும் உள்ளனர். முத்துராமன் சவுடார் பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு பல நாட்க ளாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இத னால் மன விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். தகவல் அறிந்த நாகையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி திரு மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முத்து ராமன் தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

    • அரசு இடத்தை தனியாருக்கு விற்ற ஊராட்சி செயலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமலாபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் கடந்த பல வருடங்களாக ஊராட்சி செயலராக க.விலக்கு பகுதியை சேர்ந்த குமரேசன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு திருமலாபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலராக குமரேசன் இருந்தார்.

    அப்போது பிஸ்மி நகர் பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்காக அரசு 10 செண்ட் இடம் ஒதுக்கி அதற்காக பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது ஊராட்சி மன்ற தலைவராக பழனி யம்மாள் என்பவர் இரு ந்தார். துணைத் தலைவராக இருந்த பால்பாண்டி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்நிலை யில் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஊராட்சி செயலர், ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பால்பாண்டி ஆகிய மூன்று நபர்களும் பிளாட் போட்டு விற்பனை செய்ததாக தெரியவந்தது. இது குறித்து அப்போது வட்டார வளர்ச்சி அலுவல ராக இருந்த ரங்கராஜ் என்பவர் போலீசில் புகார் அளித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்க ராஜ் கடந்த சில வருடங்க ளுக்கு முன்பு இறந்து விட்டார். ரங்கராஜ் அளித்த புகார் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு ஊராட்சி செயலர் குமரேசன் மற்றும் தலைவர் பழனியம்மாள் ஆகியோருக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை யும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ஊராட்சி செயலர் குமரேசனை சஸ்பெண்டு செய்து கலெக்டர் முரளிரதரன் உத்தரவிட்டுள்ளார்.

    இதனிடையே நேற்று இரவு ஊராட்சி செயலர் குமரேசன் திருமலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி மன்ற அலுவலக த்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களை தீ வைத்து கொளுத்தினார். இதுகுறித்து தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரும் கனிராஜா மற்றும் துணைத் தலைவர் செல்ல ம்மாள் ஆகியோர் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிமுக பிரமுகரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி செயலாளர் மீது போலீசார் வழக்கு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (42). ஊராட்சி செயலாளர். இவர் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இதற்கு காரணம் அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் முத்துமாணிக்கம் தான் என கருதிய சந்திரசேகரன் அவரது வீட்டிற்கு சென்று முத்து மாணிக்கத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஊராட்சி செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    துவரங்குறிச்சி அருகே ஊராட்சி செயலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி அவரை மாற்றக்கோரி பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள கள்ளக்காம்பட்டி ஊராட்சி செயலர், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் அவரை பணியிடமாற்றம் செய்யக் கோரி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை திடீரென மணப்பாறை- துவரங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடு பட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் மற்றும் மருங்காபுரி தாசில்தார் கருணாகரன், மருங்காபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் வேதலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்ப தாக கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    உடன்குடி அருகே ஊராட்சி செயலாளர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்செந்தூர்:

    உடன்குடி அருகேயுள்ள மெஞ்ஞானபுரத்தை அடுத்த மாநாடு தண்டுப்பத்து ஊராட்சி செயலராக பணிச் செய்து வந்தவர் சுந்தரம் (வயது45). இவர் கூடுதலாக அதே பகுதி நயினார்பத்து ஊராட்சி செயலராகவும் பணியாற்றி வந்தார். இதனால் அவருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டதாம்.

    இதுபற்றி அவர் தனது வீட்டினரிடம் கூறி புலம்பியுள்ளார். இந்த நிலையில் நேற்று அலுவலகத்துக்கு செல்வதாக கூறி சென்றார். அங்கு பணி முடித்து மாலையில் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது வீட்டினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

    இந்த நிலையில் அப்பகுதி காட்டுப்பகுதியில் அவர் வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி மெஞ்ஞானபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பணிச்சுமை காரணமாக சுந்தரம் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுந்தரம் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தரத்தின் அலுவல கத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து சுந்தரத்திற்கு கூடுதல் பணிகளை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் அடுத்த வாரம் மீண்டும் ஆய்வு செய்ய வருவதாகவும் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாகவே சுந்தரம் தற்கொலை செய் திருக்கலாம் என அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×