என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Victory Association"

    • கட்சியினர் யானை சின்னம் பொருத்திய செங்கோலை பரிசாக வழங்கினர்.
    • விஜய்யின் 69-வது படத்தின் போஸ்டரை வைத்து அரசியல் படமா?

    தஞ்சை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்று விழா பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி ஏற்றினார்.

    அதனைத் தொடர்ந்து, பெண்களுக்கு நல உதவியாக புடவைகள் வழங்கினார்.

    மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் மேல வீதியில் 50 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார். கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு கட்சியினர் யானை சின்னம் பொருத்திய செங்கோலை பரிசாக வழங்கினர். மேலும், கட்சி நிர்வாகி ஒருவரின் புதிய காரில் கட்சிக் கொடியை பொருத்தினார்.

    இந்த நிகழ்வுகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவியும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்தும் வரவேற்பளித்தனர்.

    மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி சேந்தங்குடியில் கொடி ஏற்றிய பின்னர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:-

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கமாகவும், இலக்காக உள்ளது. முதல்-அமைச்சர் நாற்காலியில் நிச்சயம் விஜய் அமருவார். இதற்காக தொண்டர்கள் அனைவரும் கட்சி பணி ஆற்றிட வேண்டும்.

    தொண்டர்கள் அனைவரும் ஜாதி, மதத்தை கடந்து மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும். விஜய்யின் 69-வது படத்தின் போஸ்டரை வைத்து அரசியல் படமா? அல்லது பொழுதுபோக்கு படமா? என்று இப்போது கூறமுடியாது. தற்போது கட்சி கொடியேற்று விழாவிற்கு வந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக புஸ்ஸி ஆனந்த் வருகையை யொட்டி மயிலாடுதுறை மேலவீதி பகுதியில் கட்சியினர் அலங்கார வளைவு அமைத்திருந்தனர்.

    அப்பகுதிக்கு சென்ற போலீசார் அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலையை ஆக்கிரமித்து அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்ததாக கூறி, அதனை அகற்ற கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும்.
    • பாதுகாப்புடன் தொண்டர்களை மாவட்ட நிர்வாகிகள் அழைத்து வர வேண்டும்.

    சென்னை:

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.

    இதையொட்டி மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் பற்றி விஜய், கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    மாநாட்டு பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில் மாநாட்டில் பங்கேற்க வரும் போது மேற்கொள்ளக் கூடிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி தொண்டர்களுக்கு கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


    இது பற்றிய விபரம் வருமாறு:-

    மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வரவேண்டும். எந்த வகையிலும் நமது கட்சி தலைவர் விஜய் மீதுள்ள மரியாதை குறையாத வண்ணம் தொண்டர்களும் நிர்வாகிகளும் நடந்து கொள்ள வேண்டும்.

    குறிப்பாக மாநாட்டுக்கு பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    வெளி மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு தயாராகி வருவோர் ஆங்காங்கே தங்குவதற்கு திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து விதிகளை பின்பற்றி மிகவும் பாதுகாப்புடன் தொண்டர்களை மாவட்ட நிர்வாகிகள் அழைத்து வர வேண்டும்.

    மாநாட்டில் மூத்த குடிமக்கள், பெண்கள் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு தனியாக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    குறிப்பாக மாநாட்டுக்கு வருவோர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. மீறி மது அருந்தி விட்டு வருவோர் மாநாட்டு பந்தலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. கூட்டணி சிதறிய தேங்காய் போல உடைந்து வரும் நிலையில் உள்ளது.
    • தி.மு.க. அரசு வந்த பிறகு தான் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே வள்ளியூர் குமாரலிங்க புரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி தற்போது சிதறிய தேங்காய் போல உடைந்து வரும் நிலையில் உள்ளது. இதற்கிடையே விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன் என்றும், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் ஏதும் செய்து விட்டீர்களா? என்றும் பேசியிருக்கிறார்.

    அரசின் ஒரு தவறைக்கூட சுட்டிக் காட்ட முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை 48 மணி நேர சோதனையை நடத்தியது.

    தற்போது பட்டாசு தொழிலாளர்கள் பதறிப் பயந்து போய் வேலை செய்வதால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. தி.மு.க. அரசு வந்த பிறகு தான் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.

    தி.மு.க. அரசால் தான் பட்டாசு தொழில் அழிந்து வருகிறது. அதேபோல் நெசவு தொழிலாளர்களுக்கு போதிய அளவில் நூல் கிடைக்கவில்லை, விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்கவில்லை. தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தவர்கள் வருகிற தேர்தலில் சரியான பாடம் புகட்டு வார்கள்.

    தமிழகத்தில் 234 தொகுதி களில் 200 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றும் என்று பேசி வருவது சரியல்ல. 200 தொகுதிகளை வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் கைப்பற்றும்.

    மேலும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்யால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, மாறாக தி.மு.க. ஓட்டுகள் தான் சிதறும். அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் வராது. 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.
    • கட்சியின் கொள்கைகள் குறித்தும் மட்டுமே பேச வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் அரசியல் பணிகள் பற்றி கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

    கூட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் பங்கேற்று தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

    மக்கள் பணிகளிலும் கட்சி பணிகளிலும் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து கட்சி தலைவர் விஜய்யை முதல் வராக்குவதே நமது லட்சியம் என தொண்டர்கள் மத்தியில் புஸ்சி ஆனந்த் பேசினார்.

    இந்த நிலையில் விஜய் அறிவுறுத்தலின் பேரில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    உத்தரவில் தங்கள் மாவட்டங்களில் தாங்களும், தங்களுக்குக் கீழ் உள்ள கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளிலும், கழக நிர்வாகிகள் மேடையில் மைக்கில் பேசும் போது நம் கட்சியின் வளர்ச்சி குறித்தும், தங்கள் தொகுதி வளர்ச்சி குறித்தும், தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் நம் கட்சியின் கொள்கைகள் குறித்தும் மட்டுமே பேச வேண்டும்.

    எக்காரணத்தை கொண்டும் அரசியல் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் மேடையிலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் மற்றவர்களை சுட்டிக்காட்டி அரசியல் பேசுவதையோ அல்லது மற்றவர்களை தாக்குவதை போல பேசுவதையோ தவிர்க்க வேண்டும்.

    நம் கழக நிர்வாகிகள், தோழர்கள் எந்த மேடையில் பேசினாலும் அது மக்களின் பிரச்சினைகள் மற்றும் நமது நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பேச வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.!

    இவ்வாறு நிர்வாகி களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    • சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
    • தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் நடிகர் விஜய்தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது முதல் அரசியல் மாநாட்டில் பேசிய விஜய் வருகிற சட்ட மன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் என்றும் நம்மோடு கூட்டணி சேரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்போம் என்றும் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.

    இந்த நிலையில் பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.

    இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது.

    இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். விஜய் கட்சியின் முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஆரோக்கியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இந்த சந்திப்பின் போது விஜய் கட்சியின் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றிய தகவல்களை பிரசாந்த் கிஷோர் கேட்டு தெரிந்து கொண்டார்.

    தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கு தேவையான வியூகங்கள் என்னென்ன என்பது பற்றி அப்போது கலந்த ஆலோசிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனையின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்கிற கருத்து பரவலாகவே பேசப்பட்டு வரும் நிலையில் அது பற்றி நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது எந்தவித ஆலோசனையும் நடைபெற வில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

    விஜய்யை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனை மையப் படுத்தியே நேற்றைய ஆலோசனையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்காக களத்தில் உள்ள கட்சிகளோடு கைகோர்த்து தேர்தலை சந்திக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காக ஆதவ் அர்ஜுனா மூலமாக காய் நகர்த்தி புதிய கூட்டணி அழைப்பதற்கு விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்காக தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதன்மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய் அதிரடியாக களமிறங்க திட்ட மிட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதனால் இன்னும் போகப்போக விஜய்யின் அரசியல் வேகம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பையும் உருவாக்கி உள்ளது.

    • பூஞ்சேரி தனியார் விடுதியில் விரைவில் நடைபெற இருக்கிறது.
    • பாதுகாப்பு வசதிகளுடன் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2-ந்தேதியுடன் முதல் ஆண்டு முடிவடைந்து 2-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.

    இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி தனியார் விடுதியில் விரைவில் நடைபெற இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் இடம், வாகன நிறுத்தும் இடங்கள், பங்கேற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட அரங்குகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் வந்து செல்லும் வண்ணம் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ×